10th-TAMIL-QTLY - SLOW LEARNERS - QUESTION PAPER-PDF

 

காலாண்டுத் தேர்வு – 2024

மெல்லக் கற்போருக்கானது

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 60

______________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                  15×1=15

1. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே __________

) பாடிய;கேட்டவர்                   ) பாடல்;பாடிய    

) கேட்டவர்;பாடிய                   ) பாடல்;கேட்டவர்

2. முறுக்கு மீசை வந்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை           ஆ) உவமைத் தொகை

இ) அன்மொழித் தொகை   ஈ) உம்மைத் தொகை

3. காசிக்காண்டம் என்பது __________

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

4. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                 ஆ) சீலா                 இ) குலா       ஈ) இலா

5. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி      ஆ)இட வழுவமைதி,மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி      ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

6. வட்டத்தொட்டி – இலக்கணக் குறிப்பு தருக.

அ) வினைத் தொகை      ஆ) உம்மைத் தொகை

இ) பண்புத் தொகை         ஈ) உவமைத் தொகை

7. நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.___________

அ) விண்மீன்          ஆ) புதுமை                       இ) காடு                  ஈ) நறுமணம்

8. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________

அ) 105                   ஆ) 100                            இ) 175                   ஈ) 583

9. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்            ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்          ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

10. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

11. ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது_____வினா.  “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________  விடை.

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல்   ஆ) அறிவினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை       ஈ) கொளல் வினா, இனமொழி விடை

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி

உரு அறிவாரா       ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “

12. ஊழ் ஊழ் – இலக்கணக் குறிப்பு

அ. இரட்டைக் கிளவி                ஆ. பண்புத் தொகை       

இ. அடுக்குத் தொடர்                           ஈ. வினைத் தொகை

13. பாடலின் ஆசிரியர்

அ. கீரந்தையார்                ஆ. பூதஞ்சேந்தனார்                 

இ. நப்பூதனார்                            ஈ. குலசேகராழ்வார்

14. பாடலில் உணர்த்தப்படும் கருத்து

அ. தத்துவக் கருத்து                  ஆ. அறிவியல் செய்தி              

இ. நிலையாமை                         ஈ. அரசியல் அறம்

15. விசும்பு , இசை , ஊழி – பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே

அ. காற்று, ஓசை, கடல்              ஆ. மேகம், இடி, ஆழம்              

இ. வானம், பேரொலி,யுகம்          ஈ. வானம்,காற்று,காலம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  2×2=4

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு

ஆ. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்று கூறியவர் ஒளவையார்.

21.  பொருள் – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                 2×2=4

22. பகுபத உறுப்பிலக்கணம் தருக : அமர்ந்தான்

23. கலைச்சொல் தருக.

                  அ) STORM             ஆ) EPIC LITERATURE

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                1×3=3

29. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்[பு வேளாண்மை தானே!.இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

அ). வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம் எது?

ஆ). இந்தியாவின் முதுகெலும்பு எது?

இ). இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     1×3=3

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

34. அ) “ வாளால் அறுத்து “ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி அடிமாறாமல்  எழுதுக

(அல்லது )

      ஆ) “வெய்யோன்” எனத் தொடங்கும் கம்பராமாயணம் பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                           1×3=3

37. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

        கோலோடு நின்றான் இரவு  - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     4×5=20

39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.      ( அல்லது )

ஆ. பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக

          குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15. காந்தி தெரு, குமாரபாளையம்,நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்கு சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42. அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம் பற்றி எழுதுக.   ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Kalaignar karunanidhi is known for his  contributions to Tamil literature. His contributions cover a wide range; poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                         1×8=8

45. அ) சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக  ( அல்லது )

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

 

 

 KINDLY WAIT FOR 10 SECONDS


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post