10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 5

 

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம்

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 5

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                 

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                          

பகுதி – I  (மதிப்பெண்கள் : 15)             15×1=15

1. எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____

அ) எள்கசடு  ஆ) பிண்ணாக்கு               இ) ஆமணக்கு                  ஈ) எள்கட்டி

2. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற  தொடர்-------

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது   ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

3. ‘ சிவப்புச் சட்டை ‘ பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை       இ) அன்மொழித்தொகை   ஈ) உம்மைத்தொகை

4. "விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்" இத்தொடரில் 'வேறார்'  என்ற சொல் குறிப்பது

அ) வேற்று மொழியார்         ஆ) வேண்டியவர்     இ) வேறு ஒருவர்      ஈ) வெற்றியாளர்

5. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

6. சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

அ) பூஞ்சோலைகள் – அரும்புகள்            ஆ) மலை – எறும்புகள் – தேன்

இ) பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன் ஈ) கானகம் – வண்டுகள் - நீர்

7. வினைமுற்றுத் தொடரைத் தேர்க

) பாடிய கவிஞர்   ) பாடினார் கவிஞர்  ) கவிஞர் பாடினார்  ) பாடும் கவிஞர்

8. தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதியது ___________

அ) திருக்குறள்                 ஆ) புறநானூறு                  இ) கம்பராமாயணம்            ஈ) சிலப்பதிகாரம்

9 . ‘ கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது ‘ – தொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ___________

அ) பாடிய ; கேட்டவர்          ஆ) பாடல் ; பாடிய     இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர்

10. இருபாலருக்கும் பொதுவான பிள்ளைத்தமிழ் பருவத்தைத் தேர்ந்தெடுக்க

) சிற்றில்  ) சிறுதேர்  ) சப்பாணி  ) அம்மானை

11. குலசேகர ஆழ்வார் “ வித்துவகோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

    பூனையார் பால் சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி          ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி          ஈ) கால வழுவமைதி, இட வழுவமதி

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக

"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ"

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

(அ) தேம்பாவணி  (ஆ) பெருமாள் திருமொழி  (இ) கம்பராமாயணம்   (ஈ) சிலப்பதிகாரம்

13. இப்பாடலின் ஆசிரியர்

(அ) இளங்கோவடிகள்  (ஆ) செய்கு தம்பி பாவலர் (இ) கம்பர்      ஈ) வீரமாமுனிவர்

14. நெடுந்திரை – இலக்கணக் குறிப்பு தருக.

(அ) உவமைத் தொகை  (ஆ) பண்புத் தொகை   (இ)  உம்மைத் தொகை  (ஈ) வினைத்தொகை

15. இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக

(அ) நெடுந்திரை – போவாரோ        (ஆ) நெடுந்திரை – நெடும்படை

  (இ) தோழமை – ஏழமை                (ஈ) போவாரோ - வில்லாளோ

பகுதி – II     பிரிவு - 1

குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

வினா எண் 21- க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.                                                                 4x2=8

16. நச்சப்படாதவன் செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் தருக

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும் :

(அ) ராகுல் சாங்கிருத்யாயன் 1942இல் ‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ என்ற நூலை எழுதினார்.

(ஆ) ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்கவேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

18. இரட்டுற மொழிதல் என்றால் என்ன?

19. ‘ வாழ்வில் தலைக்கனம்’, ‘ தலைக்கனமே வாழ்வு’ -என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்து கூறுகிறார்?

20. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர் ?

21. 'பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு-2

குறிப்பு: எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                    5x2=10

23. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க

   . பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்  . ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்.

24. தேன், நூல், பை, மலர், வா இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழியாக்குக.

22. தீவக அணியின் வகைகள் யாவை?

25. தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

அ) கொஞ்சம் அதிகம்                  ஆ) மறக்க நினைக்கிறேன்.

26. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என  அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான  மாற்று வினா.

கலவைச் சொற்றொடராக மாற்றுக :   அழைப்பு மணி ஒலித்தது, கயல்விழி கதவை திறந்தார்.

27. பகுபத உறுப்பிலக்கணம் தருக : தணிந்தது.

28. கலைச்சொற்கள் தருக.  ) Epic literature  ) Discussion

பகுதி – III  (மதிப்பெண்கள் : 18) பிரிவு -1

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                 2x3=6

29. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தாற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

        பருப் பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(இ) பெய்த மழை -இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்கலை குறித்து இரண்டு வினாக்களையும், அவற்றிற்கான விடைகளையும் எழுதுக.

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.வினா எண் 34- க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                                                                                         2x3=6

32. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

33. சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி விளக்குக.

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "அன்னை மொழியே" எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனார் பாடலை எழுதுக       (அல்லது)

(ஆ) "அருளைப் பெருக்கி" எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடலை அடிமாறாமல் எழுதுக.

பிரிவு -3

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                2x3=6

35. விடை வகைகளை எழுதுக. ஏதேனும் இரு வகைகளைச்  சான்றுடன் விளக்குக

36. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைபற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

37. உலகத்தோ  டொட்ட வொழுகல்   பலகற்றும்

      கல்லார்  அறிவிலா  தார்.                -  இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

பகுதி – IV  (மதிப்பெண்கள் : 25)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                              5x5=25

38. (அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க (அல்லது)

(ஆ) விடா முயற்சி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததுஎனும் கூற்றினை வள்ளுவர் வழி விளக்குக.

39. (அ) நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த செய்தியை ஊரில் இருக்கும் உன் மாமாவிற்கு தெரிவிக்கும் பொருட்டு கடிதம் ஒன்று எழுதுக. (அல்லது)

(ஆ) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘மரம் நடுவிழாவுக்கு‘ வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும், பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ சார்பாக நன்றியுரை எழுதுக.

40) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

41. கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகன் என்பவர் ஸ்ரீரங்கம் கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை அறிவழகனாகப் பாவித்து கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42. (அ) அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள்.ஒரு புறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள்….இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.

இக்கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.              (அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க :

Once upon a time there were two beggars in Rome. The  first begger used to cry  in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.

பகுதி – V  (மதிப்பெண்கள் : 24)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.                                           3x8=24

43. (அ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் –

அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை –

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.     (அல்லது)

(ஆ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

44. (அ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்            (அல்லது)

(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

45. (அ) அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.   இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. (அல்லது)

(ஆ) குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச் சென்ற நிகழ்வைக் கட்டுரையாக எழுதுக.

முன்னுரை - பொருட்காட்சி வகைகள் சென்னையில் அரசு பொருட்காட்சி துறை அரங்குகள் பொழுதுபோக்கு விற்பனை - பொருட்காட்சியால் விளையும் நன்மைகள்-  முடிவுரை

வினாத்தாள் தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                                 TELEGRAM                        FACE BOOK GROUP


WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share


 


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post