SLM DT - 10TH TAMIL- 1ST REVISION - ANSWER KEY - 2024

 

சேலம் மாவட்டத்தில் 10-01-2024 முதல் 22-01-2024 வரை பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  பத்தாம் வகுப்பு தமிழ்  பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் திருப்புதல் தேர்வு - விடைக்குறிப்பு - 2024
பத்தாம் வகுப்பு
தமிழ்

 சேலம் – முதல் திருப்புதல் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

PDF வடிவம் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

       நேரம் :  3.00 + 15 மணி                                                    மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. பாடல் ; கேட்டவர்

1

2.

ஆ. மோனை , எதுகை

1

3.

இ. ஐ, கு

1

4.

ஈ) வானத்தையும், பேரொலியையும்

1

5.

இ) கல்வி

1

6.

ஆ. திருச்சி, கோவை, புதுவை, நெல்லை

1

7.

அ. புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை

1

8.

இ) இடையறாது அறப்பணி செய்தலை

1

9.

அ) கருணையன் எலிசபெத்துக்காக

1

10.

ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

11.

அ) பால் வழுவமைதி

1

12 .

இ/ அடுக்குத் தொடர்

1

13 .

அ. கீரந்தையார்

1

14 .

ஆ. அறிவியல் செய்தி

1

15

இ. வானம், போரொலி, யுகம்

1

பகுதி - 2

16

அ. இராமலிங்கர் பிறந்த ஊர் எது?

ஆ. தமிழர்கள் மனித வாழ்வை எவ்வாறு பிரித்தனர்?

( பொருத்தமான வேறு விடைகள் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

17.

அரும்பு, போது, மலர் ,வீ, செம்மல்

2

18.

ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என்பதனை அறிவதற்கு முதுபெண்டிர் ஊர்பக்கம் உள்ள கோவிலில் நற்சொல் கேட்டு வணங்கி நிற்பது விரிச்சி கேட்டல்.

( நற்சொல் கேட்டு நிற்பது விரிச்சி கேட்டல் ஆகும் )

2

19

·           அறம் கூறும் மன்றங்கள்

·           துலாக்கோல் போல் நடுநிலையானது

·           மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

20

·         பாசவர்வெற்றிலை விற்போர்

·         வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·         பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·         உமணர்உப்பு விற்பவர்

2

21.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

2

பிரிவு - 2

22

v  செப்பலோசை பெற்று வரும்

v  ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்

v  இயற்சீர், வெண் சீர் மட்டுமே வரும்

v  இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வரும்.

v  இரண்டடி முதல் பனிரெண்டு அடிவரை அமையும்.

v  ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடில் முடியும்

( இவற்றில் எவையேனும் இரண்டு எழுதினால் போதும் )

1

1

23

அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்.

1

1

24.

v  பலகை – மரப்பலகை – தனி மொழி

v  பல + கை – பல கைகள் – தொடர்மொழி

2

25

அ. பண்டைய இலக்கியம்

ஆ. யாழிசை

1

1

26

இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறேன்

1

1

27

அ. கிளர் + த்(ந்) +த் + அ

கிளர் – பகுதி, த் – சந்தி, ந் – விகாரம், த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

 

1

1

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. அழகிய கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்            

ஆ. சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதி வர வேண்டும்.

1

1

28

சிலைக்கு சீலை என எழுதினான்

2

பகுதி – 3

29

அ. திருப்பாதிரிபுலியூர் ஞானியார்

ஆ. அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் மூலமாக இலக்கிய அறிவு பெற்றார்

இ. கேள்வி ஞானத்தை பெருக்கினார்

1

1

1

30

சோலைக் காற்று :           மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :                நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

( பொருத்தமான பதில்கள் வேறு இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

3

31

Ø  சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அதைப் பின்பற்றுதல் வேண்டும்.

Ø  பொது போக்குவரத்துப் பயன்பாடு

Ø  மரம் வளர்த்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

Ø  ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய மாற்றம் வேண்டும்..

3

பகுதி -3 / பிரிவு - 2

32

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

3

33

வைத்தியநாதபுரிமுருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது

·                     அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

·                     இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

·                     நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

3

34

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்                                 - நப்பூதனார்

3

34

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.           - கண்ணதாசன்

 

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

3

36

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

தொழு-தகை

நிரை – நிரை

கருவிளம்

2

யுள் - ளும்

நேர் – நேர்

தேமா

3

படை-யொடுங்-கும்

நிரை – நிரை - நேர்

கருவிளங்காய்

4

ஒன்-னார்

நேர் – நேர்

தேமா

5

அழு-தகண்

நிரை – நிரை

கருவிளம்

6

ணீ - ரும்

நேர் – நேர்

தேமா

7

அனைத்து

நிரைபு

பிறப்பு

இக் குறளின் இறுதிச் சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

·         ஒரு செய்யுளில் பல அடிகளில் சி்தறிக்கிடக்கும சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டி பொருள் கொள்வது கொண்டு கூட்டு பொருள்கோளாகும்.

எ.கா : ஆலத்து மேல குவளை குளத்துள

            வாலின் நெடிய குரங்கு.

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

38ஆ

·         பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

·         கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

·         கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது.

·         அம்பினால் உண்டான வலி போல் உள்ளது.

·         கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார்.

·         பசிக்கான வழி தெரியாது.

·         இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

5

39அ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

 

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

39ஆ

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

                   ஆசிரியர் அவர்கள்,

                   தமிழ்விதை நாளிதழ்,

                   சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

          வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு                                                இப்படிக்கு,

          1. கட்டுரை                                                         தங்கள்உண்மையுள்ள,

இடம் : சேலம்                                             அ அ அ அ அ.

நாள் : 04-01-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தமிழ்விதை நாளிதழ்,

,         சேலம் – 636001.

 

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

 என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

1.  தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்வேன்.

3.உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

5.வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்

5

42ஆ

கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை

5

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. ஒரு மென்பொருள்

2. தேவையில்லை

3. தானாகக் கற்றுக்கொள்ளும்

4. மனிதனால் கடினம் என கருதும் செயல்களையும் செய்து முடிக்கும்

5. கண்காணிப்பு கேமரா, தானியங்கிக் கதவு

5

பகுதி - 5

43அ

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக. ( வினா எண் : 38 -5 மதிப்பெண் – செய்யுள் நெடுவினா )

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா  - என ஒளவையின் நல்வழியினை வணங்கி மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும், பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு பேச உங்கள் முன் நிற்கிறேன்

மனோன்மணீயம் சுந்தரனார் வாழ்த்து :

·                தமிழ் அன்னை கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவளின் முகமாக நமது பாரத கண்டம் திகழ்கிறது.

·                அவளின் நெற்றியாக தக்காணம் அழகு சேர்கிறது.

·                அந்த நெற்றியில் நறுமணம் மிக்க குங்குமம் வைத்தாற் போல அவளை மேலும் அழகுற செய்கிறது தமிழ்நாடு.

·                குங்கும பொட்டின் மணம் அனைவரையும் இன்புறச் செய்கிறது அது போல தமிழ்அன்னை எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்றவளாக திகழ்கிறாள்.

·                உலகின் மூத்த மொழியாக உள்ள தமிழ் அன்னை என்றும் இளமையாக திகழ்கிறாள்.

·                தமிழன்னையின் வளம் என்றும் குறையாமல் பெருகுகின்றதை எண்ணியும், உன் இளமை என்றுமே நிலைத்திருக்கும்படி சுந்தரனார் வாழ்த்துகிறார்.

பெருஞ்சித்திரனார் வாழ்த்து :

·                தமிழன்னை செந்தமிழானவள். பழமையின் நறுங்கனியே

·                குமரிக் கண்டத்தில் நிலையாக இருந்த மண்ணுலக பேரரசியே!

·                பாண்டியன் மகளாக திகழ்பவளே

·                திருக்குறளின் மாண்புகளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே!

·                பதினெண்கீழ்க்கணக்கே! நிலையான சிலப்பதிகாரமே!

·                அழகான மணிமேகலையே

·                இத்தகைய நினைவுகளால் தலை பணிந்து உன்னை வாழ்த்துகிறோம். என பெருஞ்சித்திரனார் வாழ்த்துகிறார்.

 

ஓப்பீடு ( சுருக்கம் ) :

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசியாக திகழ்பவள்

நெற்றியில் மணம் வீசும் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்களாக உள்ளது.

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

8

43ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஊர்திகளில் வெளிப்பாடு

கல்வித்துறையில்

பிற செயல்பாடுகள்

முடிவுரை

முன்னுரை :-

          ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஊர்திகளில் வெளிப்பாடு :

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம்

·         போக்குவரத்து நெரிசல் குறையும்

·         பயண நேரம் குறையும்

·         எரிபொருள் மிச்சமாகும்.

கல்வித்துறையில் :

        கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே கண்டு கற்கலாம்

பிறச் செயல்பாடுகள்:

·         மனிதர்களிடம் போட்டியிடலாம்

·         பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம்.

·         சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுபிடிக்கலாம்.

முடிவுரை :

        செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் மனிதர்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

 

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம்பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர்உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

 

44ஆ

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

விண்வெளியில் தமிழர் அறிவு

கல்பனா சாவ்லா

விண்ணியல் அறிவு

வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

10 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post