10TH-TAMIL-1ST REVISION-ANSWER KEY- CHENNAI-2024

 



 சென்னை மாவட்டத்தில்  பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  பத்தாம் வகுப்பு தமிழ்  பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை  மாவட்டத்தின் வினாத்தாளினை கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு - 2024
பத்தாம் வகுப்பு - 

சென்னை 

தமிழ்



 சென்னை மாவட்டத்தில்  பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  பத்தாம் வகுப்பு தமிழ்  பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை  மாவட்டத்தின் வினாத்தாளினை கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் - 2024
பத்தாம் வகுப்பு - 

சென்னை 

தமிழ்

சென்னை – முதல் திருப்புதல் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 + 15 மணி                                                          மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. கூவிளம் தேமா மலர்

1

2.

ஈ. சிலப்பதிகாரம்

1

3.

அ. வணிக கப்பலும், ஐம்பெரும்காப்பியங்களும்

1

4.

அ. கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

5.

இ) முழு ஈடுபாட்டுடன் செய்தல்

1

6.

இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

1

7.

அ. கருணையன் எலிசபெத்துக்காக

1

8.

ஆ. பெப்பர்

1

9.

அ) வேற்றுமை உருபு

1

10.

ஈ) கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?

1

11.

இ. குவியல்

1

12 .

ஆ. பாரதியார்

1

13 .

அ. சீராக

1

14 .

அ. நெருப்பு - தருமாறு

1

15

ஈ.பாடுகிறோம்-கூறுகிறோம்

1

பகுதி - 2

16

ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.

1

1

17.

·         விருந்தோம்பலுக்கு செல்வம் இன்றையாமையாதது இல்லை.

·         விருந்து கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்

2

18.

விரும்பத் தக்க இரக்க இயல்பைக் கொண்டவர்கள்

2

19

·           அறம் கூறும் மன்றங்கள்

·           துலாக்கோல் போல் நடுநிலையானது

·           மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

20

·         சான்றோர் என்பவர் யார்?

·         மொழிபெயர்ப்பு எதற்கு உதவுகிறது?

( பொருத்தமான வேறு பதில் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

2

21.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

2

பிரிவு - 2

22

·         ஒப்பெழுத்து

·         உயிரெழுத்து

1

1

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான வினா

·         மணிமேகலை

·         தேன் மழை

1

1

23

பொறித்த – பொறி + த் + த் + அ

பொறி – பகுதி    த் – சந்தி     த் – இறந்த கால இடைநிலை  அ – பெயரெச்ச விகுதி

2

24

அ. தாய் தன் மகளை கண்ணினைக் காக்கும் இமை போல காத்து வருகிறார்.

ஆ.குற்ற பரம்பரையில் பிறந்த ஒருவர் சேற்றில் முளைத்த செந்தாமரையாக பிறர் நலத்தில் அக்கறைக் கொள்கிறார்.

1

1

25

எதிர் நிரல் நிறை பொருள்கோள்

1

1

26

அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்

 

1

1

27

முதற்பொருள்:

Ø    நிலம்                               – காடு

Ø    பெரும் பொழுது               - மழைக்காலம்

Ø    சிறுபொழுது                     - மாலை

கருப்பொருள்:

Ø  உணவு - வரகு

1

1

28

சுடுதல் ; சுட்டல்

2

பகுதி – 3

29

அ. ஊழிகாலம்

ஆ. தொடர்ந்து பெய்த மழை

இ. நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு ( ஐம்பூதங்கள் )

1

1

1

30

இரவில் வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும் உள்ளார்களா என்பதற்காக வினவப்பட்டது.

3

31

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

33

·               மேல் மண் பதமாகிவிட்டது.

·               வெள்ளி முளைத்திடுது

·               காளைகளை ஓட்டி விரைந்து செல்

3

34

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா                   

                                                                                       - பரஞ்சோதி முனிவர்

3

34

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.           - கண்ணதாசன்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

v  அவந்தி நாட்டு மன்னன் மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்கிறான்வஞ்சித்திணை

v  அவந்தி நாட்டு மன்னனை மருத நாட்டு மன்னன் காஞ்சிப் பூவை எதிர்த்துப் போரிடுகிறான் - காஞ்சித்திணை

3

36

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

தொழு-தகை

நிரை – நிரை

கருவிளம்

2

யுள் - ளும்

நேர் – நேர்

தேமா

3

படை-யொடுங்-கும்

நிரை – நிரை - நேர்

கருவிளங்காய்

4

ஒன்-னார்

நேர் – நேர்

தேமா

5

அழு-தகண்

நிரை – நிரை

கருவிளம்

6

ணீ - ரும்

நேர் – நேர்

தேமா

7

அனைத்து

நிரைபு

பிறப்பு

இக் குறளின் இறுதிச் சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

உள்ளதை உள்ளவாறு பிறர் மனம் மகிழும் படி கூறுவது தன்மை அணி

எ.கா:

மெய்யியற் பொடியும் விரித்த கருங்குழலும்

 கையில் தனிச்சிலமபும் கண்ணீரும்.......

பொருத்தம்:

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பான சொற்களால் கூறியுள்ளமையால் இது தன்மை அணி.

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

38ஆ

·         முயற்சி பற்றி திருக்குறள் கூறுகிறது.

·         முயன்றால் வெற்றி கிடைக்கும்.

·         முயற்சி இல்லையெனில் துன்பம் நேரிடும்.

·         ஒருவரின் தொடர் முயற்சிகள் கடின வெற்றியும் எளிதாக்கும்.

·         முயற்சி இல்லாவிடில் எளிய வெற்றியும் கடினமாகும்.

( பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

5

39அ

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 636001.

ஐயா,

பொருள்: நாட்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் - சார்பு

          வணக்கம். நான்  அன்பு பல்பொருள் அங்காடியில் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கினேன். அவை அனைத்தும் காலவதியான பொருட்களாக உள்ளன. எனவே அங்காடி மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறேன்

நன்றி.

இணைப்பு                                                இப்படிக்கு,

          1. பொருட்கள்                 தங்கள்உண்மையுள்ள,

          2. விலை இரசீது                                 அ அ அ அ

இடம் : சேலம்                           

நாள் : 04-01-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

,         சென்னை – 636001.

5

39ஆ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நீ உதவியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாராட்டுப் பெற்றத்தை செய்தித்தாள் மூலம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. உன் உதவி மனப்பான்மை மென்மேலும் வளரட்டும்

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

40

பகை கொண்ட வேற்று நாட்டு மன்னனை எதிர்த்துப் போரிட வஞ்சிப்பூ சூடி வென்றே தீருவோம்  குதிரைப்படை, காலாட்படை, யானைப்படையோடு முன்னேறிச்செல்வோம்.

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

5

42ஆ

·         நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

·         பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்விஆல்பிரட் ஐன்ஸ்டீன்

·         மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

·         நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் அரிஸ்டாட்டில்

·         வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளதுவின்ஸ்டன் சர்ச்சில்

5

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. விருந்தே புதுமை

2. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல்மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.

3. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர்.

4. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது

5. விருந்தோம்பல்

5

பகுதி - 5

43அ

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

43ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஊர்திகளில் வெளிப்பாடு

கல்வித்துறையில்

பிற செயல்பாடுகள்

முடிவுரை

முன்னுரை :-

          ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஊர்திகளில் வெளிப்பாடு :

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம்

·         போக்குவரத்து நெரிசல் குறையும்

·         பயண நேரம் குறையும்

·         எரிபொருள் மிச்சமாகும்.

கல்வித்துறையில் :

        கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே கண்டு கற்கலாம்

பிறச் செயல்பாடுகள்:

·         மனிதர்களிடம் போட்டியிடலாம்

·         பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம்.

·         சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுபிடிக்கலாம்.

முடிவுரை :

        செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் மனிதர்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

 

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

        புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்

·         மேகங்கள் கும்மிருட்டு

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவித் தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்.

 

44ஆ

முன்னுரை

அனுமார்

அனுமார் நெருப்பாட்டம்

அழகுவின் உதவி

அழகுவின் ஆட்டம்

அனுமார் அடைந்த மகிழ்ச்சி

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

8

45அ

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

நிலம்,நீர் மாசு

காற்று, வளி மாசு

சுற்றுச்சூழல் மாசும் மனித குலத்திற்கான கேடும்

விழிப்புணர்வு

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

அரசு பொருட்காட்சி

நுழைவு சீட்டு

பல்வேறு அரங்குகள்

உணவு அங்காடிகள்

பொழுது போக்குகள்

பயனுள்ள அனுபவம்

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

        மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

        பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

        அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

        வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

        சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

பயனுள்ள அனுபவம் :

     அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தது இந்த அனுபவம். பல்வேறு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கப் பெற்றதாலும், பலத்துறைகளின் அறிவு கிடைக்கப் பெற்றதும் மகிழ்ச்சியாக இருந்தது

முடிவுரை:

        எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,     அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

PLS WAIT 10 SECONDS




நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post