DHARMAPURI-10TH-TAMIL-HALF YEARLY - ANSWER KEY - PDF

  

 தர்மபுரி – அரையாண்டுத் தேர்வு  -2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                            மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. பாடல்; கேட்டவர்

1

2.

ஆ. 3142

1

3.

நான்கு விடைகளும் தவறாக உள்ளமையால் எது எழுதினாலும் மதிப்பெண் வழங்குக

1

4.

ஆ. விளித்தொடர்

1

5.

ஈ. கல்வி

1

6.

அ. முருகன்

1

7.

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

8.

இ) சிலப்பதிகாரம்

1

9.

இ. இடையறாது அறப்பணி செய்தல்

1

10.

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

1

11.

இ) உருவகம்

1

12 .

இ) சிலப்பதிகாரம்

1

13 .

ஆ) இளங்கோவடிகள்

1

14 .

அ. எண்ணெய் விற்போர்

1

15

அ. பாசவர், வாசவர்

1

பகுதி - 2

16

அ. தனிமொழி என்பது யாது?

ஆ. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?

1

1

17.

·         வருகவணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள்நலமா?

·         நீர் அருந்துங்கள்

2

18.

எழுந்திதிராய், எழுந்திதிராய்

காலத்தூதர் கையிலே உறங்குவாய்

2

19

·         பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்

·         உணவுக்கானப்  பணத்தில் புத்தகம் வாங்குதல்

2

20

·         முதல் நிலை தீவகம்

·         இடைநிலை தீவகம்

·         கடைநிலை தீவகம்

2

21.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

  தியற்கை அறிந்து செயல்

2

பிரிவு - 2

22

v  கற்குவியல்

v  பழக்குலை

v  புற்கட்டு

v  ஆட்டுமந்தை

1

1

23

அ. மெய்யியலாளர்

ஆ. விண்வெளிக் கதிர்கள்

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வினா

அ. விதிக்கு வீதி என எழுதினான்

ஆ. சிலைக்கு சீலை என எழுதினான்

1

1

24.

v  அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்

v  கூத்துக்கலை பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

1

1

25

அ. தேர்தலில் நின்றவுடன் உடனே அமைச்சர் ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டினான்.

ஆ. எந்த பிரச்சனையையும் ஆறப்போடுதல் நல்லது.

1

1

26

அ. சைதை       

ஆ. நெல்லை

1

1

27

அ. நிழல் தரும் மரத்தை நன்மை பயக்கும்

ஆ. சுட்டிக்குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

1

1

28

அ. அகன்ற தீபம்

ஆ. சூரியன்

1

1

பகுதி – 3

29

அ. ஒளிப்படக்கருவி செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

ஆ. உரிமையாளர் முகத்தைக் கொண்டு திறப்பது

இ. கடவுசொல்லும், கைரேகையும்

1

1

1

30

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும்அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்.

3

31

“ போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று . மரத்தாலான பொய்க்கா லில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன்அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம்புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது..

3

பகுதி -3 / பிரிவு - 2

32

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

33

வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது

·                     அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

·                     இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

·                     நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

·                     காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

3

34

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுக  ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ

3

34

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே                     வீரமாமுனிவர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

அணிநிரல் நிறை அணிசொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.காஅன்புக்கு அறன்பண்புக்குப் பயன்

3

36

Ø  அகவல் ஓசை பெற்று வரும்.

Ø  ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்

Ø  ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.

Ø  வெண்டளை,கலித்தளை விரவி வரும்.

Ø  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்

ஏகாரத்தில் முடிவது சிறப்பு

3

37

 

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

இடிப்-பா-ரை

நிரை – நேர் – நேர்

புளிமாங்காய்

2

இல் – லா-த

நேர் – நேர்- நேர்

தேமாங்காய்

3

ஏ-மரா

நேர் – நிரை

கூவிளம்

4

மன்-னன்

நேர் – நேர்

தேமா

5

கெடுப்-பார்

நிரை – நேர்

புளிமா

6

இலா-னும்

நிரை – நேர்

புளிமா

7

கெடும்

நிரை

மலர்

இக் குறளின் இறுதிச் சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகிமலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடுநெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம்மழைப்பொழிவுமாலைப் பொழுதுநற்சொல் கேட்டல்ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

38ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்

·         மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

        மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

·         இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

5

39அ

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

        சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

        நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                வீரமாமுனிவர்.

5

39ஆ

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

                   ஆசிரியர் அவர்கள்,

                   தமிழ்விதை நாளிதழ்,

                   சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு

          வணக்கம்நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                    இப்படிக்கு,

          1. கட்டுரை                                                                                                                          தங்கள்உண்மையுள்ள,

இடம் சேலம்                                                                                   அ அ அ அ அ.

நாள் : 04-03-2023

 

உறை மேல் முகவரி:

பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தமிழ்விதை நாளிதழ்,

,         சேலம் – 636001.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

கலை என் சிறப்பைப் பற்றி எழுது என்றது

கலைஞர் என் கலையைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் கலையே உயிர் என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

42ஆ

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றதுஅங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளனவிவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறதுஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. வாய்மை பேசும் நாவே உண்மையா

2. பொய்யாச் செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா

3. பொய் சொல்லக் கூடாது

4. இன்பத்தின் கதவையும், துன்பத்தின் கதவையும் திறப்பது நாக்கு.

5. பொய் சேசும் நா மனிதனை தாழ்த்துகிறது.

5

பகுதி - 5

43அ

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம்குடியரசு தினம்காந்திஜெயந்திதேசிய ஒருமைப்பாடு தினம்ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

43ஆ

பாராட்டுரை

நெகிழ்ப் பைகளின் தீமை விழிப்புணர்வு

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

அன்புடையீர் வணக்கம்,

எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும்நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதைமிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

நெகிழிப்பைகள் மூலம் மனிதர்களுக்குப் புற்றுநோய் வரக்கூடும் என்பதனை அழகாக எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுகள்.

நெகிழிகளை எரிப்பதால் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமையை அழகாக எடுத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இதன் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் இனிமேல் நெகிழியைப் பயன்படுத்தமாட்டோம் என உறுதிக் கொண்டுள்ளோம்.

 

 

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

44ஆ

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான்இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர்அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்ததுஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார்கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழிபல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

        மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

        பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

        அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

        வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள்கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

        சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

        எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

CLICK HERE TO GET PDF

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post