7TH-3RD TERM-TIRUNELVELI SEIMAIYUM KAVIKALUM-NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்


அறிமுகம்                   :

Ø  முன்னர் கற்ற பாடத்திலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  கருத்துகளைத் தொகுத்து கடிதம் எழுதும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  திருநெல்வேலி மாவட்டத்தின் பெயர்க் காரணம் கூறல்

Ø  திருநெல்வேலியில் உள்ள சிறப்புகளைக் கூறல்

Ø  திருநெல்வேலியை இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள விதம் பற்றிக் கூறல்

Ø  திருநெல்வேலியைப் பாடிய புலவர்களும், அவர்களின் பாடல்களையும் கூறல்

Ø  திருநெல்வேலி கவிகளைப் பற்றிக் கூறல்

Ø  நகரத்தின் சிறப்பை உணர்ந்து போற்றுதல்

கருத்துரு வரைபடம்                 :

 

திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்

 

 

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்

·                    பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் எட்டையபுரம்

·                    தேசிக விநாயகனார் தமிழை ஆழமாகவும் அழுத்தமாகவும் கற்ற இடம் திருநெல்வேலி

·                    தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடம் சீவலப்பேரி என்னும் முக்கூடல்

·                    பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதியை தரிசித்தார்.

·                    காவடிச்சிந்துவைப் பாடியவர் அண்ணாமலையார்.

·                    நுண்துளி தூங்கும் குற்றாலம் – என திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

·                    குற்றாலகுறவஞ்சியை திரிகூடராசப்பக்கவிராயர் பாடியுள்ளார்

 

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

o        உரைப்பத்தியினை வாசித்தல்

o        திருநெல்வேலியின் சிறப்புகளை அறிதல்

o        திருநெல்வேலியின் வளம் செழிக்கும் ஆறுகள் மற்றும் இயற்கை வளங்களை அறிதல்

o        உரைநடையில் காணும் இலக்கிய வரிகளின் பொருள் அறிதல்

o        திருநெல்வேலியில் வாழ்ந்த கவிகள் பற்றி அறிதல்

o        திருநெல்வேலிக்கு சென்று வந்த புலவர்கள் பற்றி அறிதல்

o        திருநெல்வேலி சிறப்புகளைப் பாடும் இலக்கியங்களை அறிதல்

மதிப்பீடு      :

·                    குற்றால குறவஞ்சியைப் பாடியவர் ________

·                    முக்கூடல் பற்றிக் கூறுக

·                    திருநெல்வேலி கவிஞர்கள் பற்றிக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

                 திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்

T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு

கூறுகளைதேடிக் கண்டறிதல்.

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  உங்கள் ஊரின் சிறப்பை ஒரு பக்க அளவில் எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post