6TH-3RD TERM- UNIT-1-NATTRANGAL-NOTES OF LESSON-2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      ஆறாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      பாரதம் அன்றைய நாற்றங்கால்


அறிமுகம்             :

·         நீங்கள் சுற்றுலா  சென்று வந்த இடங்கள் குறித்து கூறுக.

·         தமிழ்நாட்டில் உன்னை கவர்ந்த இடம் பற்றிய செய்திக் கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்               :

·         இந்திய நாட்டின் சிறப்புகளை உணர்தல்.

·         இந்திய வளங்களைக் கண்டு பெருமை அடைதல்

ஆசிரியர் குறிப்பு    :

 

·         பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

·         நாட்டின் இயற்கை வளங்களை பேணுதல்

·          நாட்டின் வளங்களைப் பாதுகாத்தல்

·          நாட்டின் வளங்களை, இந்திய தாய்க்கு ஒப்பிடல்

·         பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்துரு வரைபடம்                 :

பாரதம் அன்றைய நாற்றங்கால்


 

விளக்கம்  :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

·         ஆசிரியர் : தாராபாரதி

·          நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு.

·         திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது

·         கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

·         புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன.

·         அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது

·         அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


செயல்பாடு :

·         பாடப்பகுதியினை வாசித்தல்

·         சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

·          நாட்டின் இயற்கை வளங்களை அறிதல்

·         இயற்கை வளங்களை பாதுகாத்தல்

·         பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

·         பாடலின் நயங்களை அறிதல்

மதிப்பீடு      :

·         தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______

·         பாடலில் இடம் பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் கூறுக.

·         நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை யாவை?

கற்றல் விளைவுகள்                  :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

·         T607 மற்றவர்களின் மொழிகள் உணவுப் பழக்கங்கள் வாழ்க்கை நிலை அவற்றில் காணப்படும் வேற்றுமைகள் அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றி பேசுதல் .

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நாடு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post