7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT2 - INBA THAMIZH KALVI - PDF

 இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

பருவம் : 2                                                                        இயல் : 2

கல்வி                                                                           இன்பத்தமிழ்க் கல்வி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதா சன் கூறுவது________

அ) மயில்      ஆ) குயில்     இ) கிளி        ஈ) அன்னம்

2. பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக் குறிக்கும் சொல்

அ) வெற்பு     ஆ) காடு        இ) கழனி      ஈ) புவி

3. ’ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _

அ) ஏடெடு + தேன்             ஆ) ஏட்டு + எடுத்தேன்

இ) ஏடு + எடுத்தேன்           ஈ) ஏ + டெடுத்தேன்

4. ‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) துயின்று + இருந்தார்               ஆ) துயில் + இருந்தார்

இ) துயின்றி + இருந்தார்               ஈ) துயின் + இருந்தார்

5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) என்றுஉரைக்கும்         ஆ) என்றிரைக்கும்

இ) என்றரைக்கும்             ஈ) என்றுரைக்கும்

பொருத்துக.

1. கழனி - கதிரவன்

2. நிகர் - மேகம்

3. பரிதி - சமம்

4. முகில் - வயல்

குறுவினா

1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?

2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?

 சிறுவினா

1. ’இன்பத்தமிழ்க் கல்வி’ - பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

 

சிந்தனை வினா

 தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

PDF - FILE

KINDLY WAIT FOR 10 SECONDS 

பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post