6TH-TAMIL - 2NDTERM - NANILAM PADAITHAVAN - NOTES OF LESSON

  

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு

பருவம் : இரண்டு

பாடம்               :           தமிழ்                                                                       இயல் : 03          

பாடத்தலைப்பு               1.  நானிலம் படைத்தவன்

அறிமுகம்                           :

Ø  அன்றாட உணவுத் தேவைக்கான பொருட்களைப் பற்றி கூறி அவற்றை பெறும் வழிகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்     :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                            :

Ø  தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறிதல்

ஆசிரியர் குறிப்பு          :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  நானிலங்களை கூறல்

Ø  நானிலங்களின் தன்மையினைக் கூறல்

Ø  தமிழர்களின் வணிகம் பற்றிக் கூறல்

Ø  ஏற்றுமதி, இறக்குமதி பற்றிக் கூறல்

Ø  பொருட்களை வாங்குவதும், விற்பதும் வணிகம் என்பதனை உணர்த்துதல்

Ø  அன்றைய வணிகத்தை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்

கருத்துரு வரைபடம்               :

நானிலம் படைத்தவன்

 


விளக்கம்        :

நானிலம் படைத்தவன்

Ø  தமிழன் பெருநிலப்பரப்பைத் திருத்தி பண்படுத்தினான்

Ø  ஊர்,நகரம்,நாடு உருவாக்கினான்

Ø  நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என நால்வகைப்படுத்தினான்

Ø  அச்சம் தரும் போர்களின் வெற்றி கண்டான்

Ø  இமயமலையில் கொடியினை நட்டான்

Ø  ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்

Ø  கண்டங்கள் தோறும் வணிகம் செய்தான்

Ø  அவன் எதற்கு அஞ்சாதவன்

Ø  ஆசிரியர் : முடியரசன் ( துரைராசு).

Ø  திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர்

காணொளிகள்            :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

மாணவர் செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்

Ø   பாடலின் மையக் கருத்தை அறிதல்

Ø   பண்டைய தமிழர் வணிகம் பற்றி அறிதல்

Ø   பாடலின் நயங்களை உணர்தல்

மதிப்பீடு                   :

                             LOT :

Ø  நானிலம் பிரித்து எழுதுக.

Ø  நிலம் என்பது யாது?

MOT :

Ø  பண்டம் என்பது என்ன? தொடரில் அமைத்துக் கூறுக

Ø  தமிழன் எதற்கு அஞ்சினான்?

HOT

Ø  காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனக் கூறுக

Ø  பண்டைய வணிகமும், இன்றைய வணிகமும் பற்றிக் கூறுக

கற்றல் விளைவுகள்                    :

Ø   614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை  வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்

Ø   609 – மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்

தொடர் பணி              :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தலுக்குரிய நிலங்களை அறிந்து எழுதுக

Ø  நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post