6TH-TAMIL - 2NDTERM - MAYANGOLIGAL,THIRUKKURAL - NOTES OF LESSON

  

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு

பருவம் : இரண்டு

பாடம்               :           தமிழ்                                                                       இயல் : 02         

பாடத்தலைப்பு               1.  மயங்கொலிகள்

                                              2. திருக்குறள்

அறிமுகம்                           :

Ø  ஒரே மாதிரியாக ஒலிக்கும் சில சொற்களை கரும்பலகையில் எழுதி மாணவர்களிடம் அதன் பொருள் கேட்டு அறிமுகம் செய்தல்

Ø  திருக்குறள் கதையினை கூறு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்     :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                            :

Ø  மயங்கொலிகள் வேறுபாடுகள் அறிந்து மொழியை சரியாகப் பயன்படுத்துதல்

Ø  வாழ்விற்குத் தேவையான அறக் கருத்துகளை இலக்கியங்கள் மூலம் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு          :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள்

Ø  பல்லவ மன்னன் குறித்து அறிதல்

Ø  ,ன,ந – கரம் பிறக்கும் முறை பற்றிக் கூறல்

Ø  ல,ழ,ள – எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிக் கூறல்

Ø  ர,ற – எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிக் கூறல்

Ø  விருந்தோம்பல், கள்ளாமை,ஊக்கமுடைமை, பயனில சொல்லாமை – அதிகாரங்கள் கூறும் கருத்துகளை வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்

கருத்துரு வரைபடம்               :

மயங்கொலிகள்



திருக்குறள்



 

 

விளக்கம்        :

மயங்கொலிகள்

Ø  டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,

Ø  தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்,

Ø  றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும்

 அழைக்கப்படுகின்றன..

Ø  ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின்

 அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.

Ø  ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல்

 அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம்

 தோன்றும்

Ø  ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால்

 ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில்

 ஒலிக்கப்படும்)

Ø  ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத்

 தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது


Ø  ற - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை

 உரசுவதால் றகரம் தோன்றுகிறது.

திருக்குறள்

Ø  விருந்தோம்பல்

o    விருந்தினர் வரவேற்கும் முறை

Ø  கள்ளாமை

o    களவாடுதல் குற்றம்

Ø  ஊக்கமுடைமை

o    ஊக்கம் மிகப்பெரிய செல்வம்

Ø  பயனில சொல்லாமை

o    பயனுடைய சொற்களை நாம் பேசல் வேண்டும்                                          

காணொளிகள்            :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   மயங்கொலி எழுத்துகளை அறிதல்

Ø   மயங்கொலி எழுத்துகளை உச்சரித்து பார்த்தல்

Ø   மயங்கொலிகள் மூலம் காணும் பொருள் வேறுபாடு அறிதல்

Ø   திருக்குறள் குறள்களை சீர் பிரித்து வாசித்தல்

Ø   மனப்பாடக் குறளை மனனம் செய்தல்

Ø   திருக்குறள் கூறும் கருத்துகளை வாழ்வியலோடு ஒப்பிடல்

மதிப்பீடு                   :

                             LOT :

Ø  டகரத்தை அடுத்துப் பிறப்பது _______ ( ண/ந/ன)

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

MOT :

Ø  ல,ழ,ள – கரத்திற்கு வழங்கும் பெயர்கள் யாவை?

Ø  ஊக்கம் உயர்ந்த செல்வமாக திருவள்ளுவர் கருத காரணம்

 என்ன?

HOT

Ø  இடையின ரகரம், வல்லின றகரம் இரண்டிற்கும் பொருள்

 வேறுபாடு தரும் சொற்களை கூறுக

Ø  நாம் வாழ்வில் எப்படிப்பட்ட சொற்களைப் பேச வேண்டும்?

 எப்படிப்பட்ட சொற்களைப் பேசக் கூடாது?

கற்றல் விளைவுகள்                    :

Ø   614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை

 வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின்

 பொருளை புரிந்து கொள்ள முயலுதல்

Ø   609 – மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட

 செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும்

 முடிவு செய்தல்

தொடர் பணி              :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  பொருள் வேறுபாடு மயங்கொலி சொற்களைக் கண்டு அவற்றின் பொருள் எழுதி வருக.

Ø  நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post