6TH-TAMIL - 2NDTERM - ENA ELUTHUKKAL , ASARAKKOVAI - NOTES OF LESSON

 

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு

பருவம் : இரண்டு

பாடம்               :           தமிழ்                                                                       இயல் : 01  ,  02

பாடத்தலைப்பு               1.  இன எழுத்துகள்

                                              2. ஆசாரக்கோவை

அறிமுகம்                                 :

Ø  உனது வகுப்பில் உனக்கு மிகவும் பிடித்த நண்பர் யார்? ஏன் அவர் உனக்கு நண்பர்?

Ø  உனக்கு யாரேனும் உதவி செய்து உள்ளார்களா? எப்படிப்பட்ட உதவி செய்துள்ளனர்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  சொற்களில் எழுத்துகள் அமையும் முறையறிந்து பயன்படுத்துதல்.

Ø  நல்லொழுக்கப்பண்புகளை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  இன எழுத்துகள் பற்றி அறிதல்

Ø  ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

Ø  ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.

Ø  ஆசாரகோவை என்னும் நீதி நூல் பற்றி அறிதல்

Ø  ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்

Ø  ஆசாரக்கோவைக் கூறும் நல்லொழுக்க வித்துகளை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

கருத்துரு வரைபடம்                 :

இன எழுத்துகள்



ஆசாரக்கோவை

விளக்கம்  :

இன எழுத்துகள்

Ø  ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

Ø  ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின

 எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.

Ø  சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும்

 அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

Ø  இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே

 இனமாகும்

Ø  உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும்

 இன எழுத்துகள் ஆகும்.

Ø  குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன

 எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன

 எழுத்தாகும்..

                                              ஆசாரக்கோவை

Ø  பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;

Ø   பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;

Ø  இனிய சொற்களைப் பேசுதல்;

Ø   எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;

Ø  கல்வி அறிவு பெறுதல்;

Ø  எல்லோரையும் சமமாகப் பேணுதல்;

Ø  அறிவுடையவராய் இருத்தல்;

Ø  நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்

Ø  எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   தமிழ் எழுத்துகளில் இன எழுத்துகள் அறிதல்

Ø   சொற்களில் முறையாக எழுத்துகளை அமைத்து சொற்கள் உருவாக்கல்

Ø   எந்த்தெந்த எழுத்திற்கு எந்தெந்த எழுத்துகள் இனமாக வரும் என அறிதல்

Ø   ஆசாரக் கோவைப் பற்றி அறிதல்

Ø   ஆசாரக்கோவை எனும் நீதி நூலில் கூறப்பட்டுள்ள

 அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  இன எழுத்துகள் என்பது யாது?

Ø  ஆசாரக்கோவை ________ நூல்களில் ஒன்று

MOT :

Ø  உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் யாவை?

Ø  எட்டு நல்லொழுக்க வித்துகள் யாவை?

HOT

Ø  ஆய்த எழுத்துக்கு இன எழுத்து உண்டா? இல்லையா? காரணம் கூறுக.

Ø  உங்கள் நண்பரிடம் உங்களுக்கு பிடித்த பண்புகளை கூறுக,

கற்றல் விளைவுகள்                  :

Ø   604 - பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை திரும்பக் கூறல்

Ø   610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை படித்துப் புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  இன எழுத்துகளை பட்டியலிடுக

Ø  நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வாறெல்லாம் உதவி புரியலாம் என பட்டியலிடுக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post