STATE LEVEL ESSAY COMPETION WINNERS - ANNOUNCED

  

மாநில அளவிலான கட்டுரைப் போட்டி - 2023

சுதந்திர இந்தியா - 2023

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நாம் இந்த இந்திய திருநாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கொண்டு இருக்கிறது. இந்நாளில் நாம் அனைவரும் அவர்களின் தியாகங்களைப் போற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் எப்படி பட்ட இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்பது வகுப்பறையில் நான்கு சுவர்களில் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலமே வகுப்பறையின் நான்கு சுவர்களில் உள்ளது என்றால் அது மிகையாகது. மாணவர்களாகிய நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். நீங்கள் வல்லவர்களாக மாறும் போது இந்தியாவும் வல்லமைக் கொண்டநாடாக மாறும். நீங்கள் உங்களின் இந்தியா எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்களோ அந்த இந்தியாவாக மாற நாம் அதற்கேற்றவாறு உழைக்க வேண்டும். இந்த 2023 சுதந்திர தினத்தில் இந்தியாவின் சுதந்திரத்தைப் போற்றவும், பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் இணைந்து மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்தினோம். இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களின் கட்டுரைகளை பதிவேற்றம் செய்துள்ளீர்கள். பல்வேறு வகையான கட்டுரைகளை கண்டு நாங்கள் வியப்படைந்தோம். மாணவர்கள் பல்வேறு விதமான சிந்தனைக் கூறுகளை உள்ளீடு செய்து கட்டுரைகளை சமர்பித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களின் படைப்புகளால் நாங்கள் மிகவும் நெகிழ்ந்தோம். இந்த போட்டியில் எந்த கட்டுரைக்கு பரிசு வழங்குவது? எந்த கட்டுரையைத் தவிர்ப்பது என மிகப் பெரிய மன சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் சிறந்த கட்டுரையைத் தேர்வு செய்து பரிசு வழங்குவதில் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறது. இனி வரும் முக்கிய நாட்களில் இது போன்று மாணவர்களின் திறனை வளர்க்கும் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு ஆசிரியப் பெருமக்கள் ஆகிய நீங்களும், மாணவச் செல்வங்களும் ஆதரவு அளிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

பரிசு பெற்றவர்கள் விபரம்



Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post