10TH - TAMIL - UNIT TEST - UNIT 8

 வகுப்பு : 10                                                        அலகு : இயல் -8

பாடம்    : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                     5×1=5

1. இருவர் உரையாடுவது போன்ற ஓசை தருவது __________

அ) அகவலோசை             ஆ)  துள்ளலோசை          இ) செப்பலோசை

ஈ) தூங்கலோசை

2 ஜென் தத்துவம் எந்த நாட்டில் உருவானது __________

அ) இந்தியா                    ஆ) சீனா            இ) ஜப்பான்                    ஈ) தாய்லாந்து

3. ‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

அ) கான் அடை – காட்டைச் சேர்                ஆ) கால் உடை – காலால் உடைத்தல்

இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்                       ஈ) கால் நடை – காலால் நடத்தல்

4. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது______________

) காலம் மாறுவதை     ) வீட்டைத் துடைப்பதை  இ. இடையறாது அறப்பணி செய்தலை        ஈ. வண்ணம் பூசுவதை      

5. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் ___________

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது                 ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது               

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்                ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்                                                     

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                       4×1=4

“ கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல், அளித்தல்,அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை;அறிக! “

6. இப்பாடலின் ஆசிரியர்

அ. தி.சொ.வேணுகோபாலன்          ஆ. கண்ணதாசன்          

இ. கு.ப.ராஜகோபாலன்               ஈ. ஜெயகாந்தன்

7. இப்பாடல் இடம்பெற்ற நூல்-------

அ. காலக்கணிதம்                        ஆ. தேம்பாவணி             இ. சிலப்பதிகாரம்

ஈ. இரட்டுறமொழிதல்

8. ‘ புகழுடை ‘ –  என்பதனை பிரித்து எழுதுக..

அ. புகழ் + இடை              ஆ. புகழ் + உடை            இ. புகழ் + ழிடை

ஈ. புகழ் + ழுடை

9. இயம்புவது – என்பதன் பொருள்

அ. எடுப்பது                     ஆ. கூறுவது       இ. எழுதுவது                  ஈ. படிப்பது

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                             3×2=6

10. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. நிறைவடைகிறவனே செல்வன் என்கிறது சீன நாட்டுத் தாவோயியம்.

ஆ. ‘ உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.

11. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

     உள்வார்த்தை உடம்பு தொடாது’

அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.

ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக:- கொள்க,குரைக்க

12. . போர் அறம் குறித்து எழுதுக

13. காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                             4×2=8

14.  மரபுத்தொடரின் பொருளறிந்து தொடரில் அமைக்க.

அ) கண்ணும் கருத்தும்                            ஆ) ஆறப்போடுதல்

15. கலைச்சொல் தருக:- அ. BELIEF            ஆ. PHILOSOPHER

16. ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் இரண்டு எழுதுக.

17. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும்.துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது.இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                             2×3=6

( வினா எண் – 20 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

18. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

19.   வாளித் தண்ணீர், சாயக்குவளை,கந்தைத்துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி ஒரு பத்தி அமைக்க

20. “ மாற்றம் எனது “ எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடலை எழுதுக.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                               2×3=6

21.  ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

22.  கரப்பிடும்பை இல்லாரைக் காணிக் நிரப்பிடும்பை

     எல்லாம் ஒருங்கு கெடும் – அலகிட்டு வாய்பாடு காண்க

23. மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எழுதுக

VI) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                 3×5=15

24.அ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

( அல்லது )

ஆ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்கு பாராடுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

25. அ) குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி

(அல்லது )

ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

                                    கவிஞன் யானோர் காலக் கணிதம்

                                    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

                                    புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

                                    பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

                                    இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

                                    இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

                                    ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

                                    அவனும் யானுமே அறிந்தவை;அறிக!

-         கண்ணதாசன்.

26. நயம் பாராட்டுக:-

அ)  கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

            உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

            மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

   ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

            ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

( அல்லது )

ஆ ) மொழிபெயர்க்க.

                Once upon a time there were two beggars in Rome. The  first begger used to cry  in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.

 

PLS WAIT FOR 10 SECONDS AFTER DOWNLOAD BUTTON ENABLE 

KINDLY DONWLOAD THIS QUESTION - PDF
STAY THIS PAGE


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post