9TH-TAMIL-GOVT.MODEL -QUESTION - 2023 - ANSWER KEY - PDF

அரசு மாதிரிப் பொதுத் தேர்வு - 2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

1) .மூன்று,நூறு,பத்து,எட்டு

1

2.

இ. வளம்

1

3.

அ. ஆ,அ,இ

1

4.

ஆ. ஆராயாமை, ஐயப்படுதல்

1

5.

4. சித்தாரா, நேவிக்

1

6.

ஈ. எதிர்மறை வினையெச்சம், உவமைத் தொகை

1

7.

ஈ. கெடுதல்

1

8.

ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள்

1

9.

ஆ. நாணமும்,இணக்கமும்

1

10.

இ. அள்ளல் - சேறு

1

11.

ஈ. அறிவு

1

12.

இ. பூமி

1

13.

அ. தொகைச்சொல்

1

14.

இ.உரிச்சொல்

1

15.

நான்கில் எது எழுதி இருப்பினும் அது சரியான விடை

1

பகுதி – 2/ பிரிவு - 1

16.

உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

2

17.

மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு.

2

18.

செயல் வேறு சொல் வேறு என்று இருப்பவரின் நட்பு கனவிலும் இனிக்காது.

2

19

பொறுமை,அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப் பூச்சியாக கோலம் கொள்ளும் என கவிஞர் குறிப்பிடுகிறார்.

2

20.

எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது ஆகும்.

2

21

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ.பேரகராதி

ஆ.ஒலியன்

1

1

23

அ. வீணையோடு வந்தான் – வேற்றுமைத் தொடர்

ஆ. கிளியே பேசு – விளித்தொடர்

1

1

24

.பாய்வன – பாய் + வ் + அன் + அ

பாய் – பகுதி; வ் – எதிர்கால இடைநிலை; அன் – சாரியை; அ-பலவின்பால் வினைமுற்று விகுதி

1

1

25.

அ. வாள்நுதல்

ஆ. கடிமனை

1

1

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான வினா

தேன் மழை, மணி மேகலை, பொன்வான், பூமழை

2

26.

அ. பூவினம்

ஆ. சேயடி ( அ ) சேவடி

1

1

27.

அணி :  உவமை அணி

விளக்கம் : செய்யுளில் உவமானம்(உவமை),உவமேயம் ( பொருள் ), உவம உருபு ஆகிய மூன்றும் வருவது உவமையணி ஆகும்.

உவமானம் : கனியிருப்ப காய் கவர்ந்தற்று

உவமேயம் – இனிய உளவாக இன்னாதக் கூறல்

உவமஉருபு - அற்று

2

28.

அ. ஒன்று பெற்றால் ஒளிமயம்

ஆ. மூன்று கிலோ கொடு

1  

1

பகுதி – 3 / பிரிவு - 1

29

1. தென் திராவிட மொழிகள்

            2. நடுத்திராவிட மொழிகள்

            3. வடதிராவிட மொழிகள்

தென் திராவிடம் : தமிழ் மொழி

            தமிழ் என்னென்றும் நிலைத்திருப்பது. மக்களின் அகப்புற வாழ்க்கையை அழகாக காட்டும் இலக்கியங்கள் உள்ளன. மனித வாழ்வுக்குத் தேவையான நீதிநெறி கருத்துகளை கூறும் நீதி நூல்கள் உள்ளன.

3

30

  • தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
  • 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
  • 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம்
  • அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

3

31.

அ. கண்மாய்

ஆ. மணற்பாங்காம இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு ‘ உறைக்கிண்று ‘ என்று பெயர்

இ. மக்கள் பருக உகந்த நீராக ஊருணி பயன்படுகிறது

1

1

1

பகுதி – 3 / பிரிவு - 2

32

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகளி எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது.

3

33.

அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.

3

34.

அ) ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

  போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

  நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

  காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே     

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

கைபிடி – கையைப் பிடி – இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி

கைப்பிடி – கையால் பிடி – மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி

3

36.

வல்லினம் மிகும் போது ஒரு பொருளும் மிகாத போது வேறொரு பொருளும் வருவதைக் காணலாம். நாம் பேசும் போதும் எழுதும் போதும் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகும் இடம், மிகா இடங்களை அறிவது இன்றியமையாதது.

எடுத்துக்காட்டு :

1.      மண்வெட்டி கொண்டு வா.

2.     மண்வெட்டிக் கொண்டு வா.

இவற்றில் முதல் தொடர் மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடர் மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இவ்வா று பொருள் தெளிவை ஏற்படுத்தவும் வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவது இன்றியமையாகிறது.

3

37

·         உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி,

எ.கா : மையோ மரகதமோ மறிகடலோ - இஃது உருவக அணி

விளக்கம் : கண்ணனை மை, மரகதம், மறிகடல் என உருவகிக்கப் படுகிறது

3

பகுதி – 4

38

வ.எ

அறிவுநிலை

அறியும் ஆற்றல்

உயிரினங்கள்

1

ஓரறிவு

தொடுதல்

புல்,மரம்

2

ஈரறிவு

தொடுதல் மற்றும் சுவைத்தல்

சிப்பி,நத்தை

3

மூவறிவு

தொடுதல்,சுவைத்தல் மற்றும் நுகர்தல்

எறும்பு, கரையான்

4

நாலறிவு

தொடுதல், சுவைத்தல்,நுகர்தல் மற்றும் காணல்

நண்டு, தும்பி

5

ஐந்தறிவு

தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், மற்றும் கேட்டல்

பறவை, விலங்கு

6

ஆறறிவு

தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் மற்றும் பகுத்தறிதல்

மனிதன்

5

38

சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது.

·         இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.

·         சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர்

·         அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார்.

·         பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள்.

·         இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.

·         கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

·         இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள்.

5

39

·         நாள்,இடம்

·         விளித்தல்

·         கடிதச் செய்தி

·         இப்படிக்கு,

·         உறைமேல் முகவரி

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.

------------------------------------------------------------

12, தமிழ் வீதி,

மதுரை-2

                                                                                                                                  28,செப்டம்பர் 2021.

அன்புள்ள நண்பா !                                        

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

                                                                                                                                            அன்பு நண்பன்,                                                                                                                                                அ.எழிலன்.

உறைமேல் முகவரி:

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் - 1

½

½

½

2

½

1

39

ஆ.

·         அனுப்புதல்

·         பெறுதல்

·         விளித்தல்,பொருள்

·         கடிதச் செய்தி

·         இப்படிக்கு,

·         நாள்,இடம்

·         உறை மேல் முகவரி

 

-------------------------------------------------------------

அனுப்புநர்

         க. இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் உயர்நிலைப்பள்ளி,

        கோரணம்பட்டி,

 

பெறுநர்

        மேலாளர்,

        தமிழ்விதைப் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                       தங்கள்  உண்மையுள்ள,

      க.இளவேந்தன்.

(மாணவர் செயலர்)

                                

நாள் : 01-09 -2021     

இடம் : கோரணம்பட்டி                                                                                                           

                                                                                                       

                                                                          

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

தமிழ்விதைப் பதிப்பகம்,

சென்னை-600 001.

 

½

½

½

2

½

½

½

 

40

படத்திற்கு பொருந்தும் பொருத்தமான கருத்தை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41.

படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

5

42

அ.

1. பிறருக்கு உதவுதல்

2. அடுத்தவர் துன்பத்தைக் கண்டு மகிழாமை

3. நேர்மையுடன் உழைத்தல்

4. சேமிப்பு பழக்கம் கொள்ளுதல்

5. எல்லோருக்கும் பயன்படும் படியாக வாழ்தல்

5

42

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.

உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.

பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

5

 

பகுதி – 5

 

43

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழைநீர்

உணவெனப்படுவது நீர்

பல்லுயிர் பாதுகாப்பு

முடிவுரை

முன்னுரை :

நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை நீர் :
மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

பல்லுயிர்ப் பாதுகாப்பு :
உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

முடிவுரை :

உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது.எனவே நீரின் அவசியம் உணர்ந்து பாதுகாக்க வேண்டும்

8

 

ஆ.

சிற்பக்கலை

          கல், உலோகம், செங்கல்,மரம் முதலியவற்றைக் கொண்டு, கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை.

பல்லவர் காலச் சிற்பங்கள் :

·         மாமல்லபுர கடற்கரையில் உள்ள பாறைச் சிற்பங்கள் சிற்பக் கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்துகின்றன.

பாண்டியர் காலச் சிற்பங்கள் :

·         பாண்டியர் காலக் குகைக் கோவில்களை திருமயம், திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி போன்ற இடங்களில் காணலாம்.

சோழர் காலச் சிற்பங்கள் :

·         தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராதீசுவரர், திருவரங்கம்

விஜய நகர மன்னர்கள் காலச் சிற்பங்கள் :

·         கோவில் கோபுரங்களில் சுதையாலான சிற்பங்களைக் காணலாம்.

·         பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்துள்ளனர்.

நாயக்கர் காலச் சிற்பங்கள் :

·         மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் கலைநயம் மிக்க சிற்பங்களைக் காணலாம்

8

44.

அ.

நா..முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் செய்திகளைக் காண்போம்.

·         உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும்.

·         வாழ்க்கை முழுக்க நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும்.

·         கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்.

·         இறக்கும் வரை இங்கு வாழ சூத்திரத்தைக் கற்றுக் கொள்.

·         மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில் இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள்.

·         கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய்.

·         யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய்.

·         உலகில் மேலானது நட்பு மட்டுமே. நண்பர்களைச் சேர்த்துக் கொள்.

·         உன் வாழ்க்கை நேராகும்

8

44

ஆ)

இந்திய விண்வெளித்துறை

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

·         இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,

·         குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.

·         இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன.

·         இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

·         1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்

·         1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.

·         சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.

·         நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.

முடிவுரை:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு

8

45

அ. அரசினர் உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி,

சேலம் மாவட்டம்.

28.9.2021 அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்

திருமிகு. கு.சிவானந்தன் அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்

 

தமிழகம் பெற்ற தவப்புதல்வரே!  

    வருக! வருக! வணக்கம்.

     மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகாப்புப் பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம் பெற்றதாகத் தாங்கள் அறிவித்து கண்டு, பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு பெற்றமைக்குப் பெரிதும்  உவகை கொள்கிறோம்!

பள்ளியின் சுற்றுபுறத்தைப் பேணிகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்!

    எங்கள் வகுப்பறையைப் போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும் நீங்கள் கூறிய வழிமுறைகளை  நாளும் கடைப்பிடித்து வருகிறோம்.

நீங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.

                                                        நன்றி, வணக்கம்

கோரணம்பட்டி

28.9.2021.                                                                    தங்கள் அன்புள்ள,

                                                                                    விழாக்குழுவினர்.

 

ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

45

ஆ. ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

       சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்

   ஏற்காடு படகு இல்லம்,

   சீமாட்டி இருக்கை,

   பகோடா உச்சி,

   பூங்கா,

    காவேரி சிகரம்,

   சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு.

 

 

உட்தலைப்புகள் இட்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

 


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.


CLICK HERE TO GET THIS ANSWER KEY - PDF
KINDLY WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post