10TH-TAMIL-GOVT PUBLIC QUESTION PAPER-2023 - ANSWER KEY- PDF

 

அரசு பொதுத் தேர்வு - 2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ.சருகும் சண்டும்

1

2.

அ. அங்கு வறுமை இல்லாததால்

1

3.

இ. உழவு,ஏர்,மண்,மாடு

1

4.

அ. கருணையன் எலிசபெத்துக்காக

1

5.

ஈ. இலா

1

6.

அ. அருமை + துணை

1

7.

ஆ.உருபு பயனும் உடன் தொக்க தொகை

1

8.

ஆ. அதியன் ; பெருஞ்சாத்தன்

1

9.

அ. நான்கு, ஐந்து – ௪ , ௫

1

10.

இ. மரபு வழுமவமைதி

1

11.

ஆ. வினையெச்சத் தொடர்

1

12.

ஈ. சிலப்பதிகாரம்

1

13.

அ. பகர்வனர் ; பட்டினும்

1

14.

ஆ. நெசவாளர்

1

15.

இ. அகிலும் ; சந்தனும்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

வரகு, காடைக்கண்ணி,குதிரைவாலி

2

17.

அ. பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்?

ஆ. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது எது?

1

18.

·   சதம் என்றால் நூறு

·   ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

1

1

19

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள்

2

20.

Ø  அறம் கூறும் மன்றங்கள்

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

21

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ. உதகை

ஆ. நெல்லை

இ. சைதை

ஈ. குடந்தை

½

½

½

½

23

அ. ஒரு சோறு பதம்

ஆ. மீறினால் அமிர்தமும் நஞ்சு

1

1

24

.ஒலித்து – ஒலி + த் + த் + உ

ஒலி – பகுதி

த் – சந்தி

த் – இறந்த கால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

1

1

25.

அ. காப்புரிமை

ஆ. புயல்

1

1

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான வினா

தேன் மழை, மணி மேகலை, பொன்வான், பூமழை

2

26.

அ. அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத் தொகை

ஆ. தொடுதிரை – வினைத்தொகை

1

1

27.

அ. மனக்கோட்டை – தேர்தலில் நின்றவுடன் முதலமைச்சர் ஆகிவிடலாம் என மனக்கோட்டை கட்டினான் கண்ணன்.

ஆ. கண்ணும் கருத்தும் – தாய் தன் மகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தாள்

1

1

28.

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.

எ.கா:

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்

2

பகுதி – 3 / பிரிவு - 1

29

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்

3

30

அ. போலச் செய்தல்

ஆ. புரவி ஆட்டம், புரவி நாட்டியம்

இ. மராட்டியர்

1

1

1

31.

சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                      பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                     கொள்வேன்

சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                     விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

3

பகுதி – 3 / பிரிவு - 2

32

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

3

33.

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டு

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

3

34.

அ) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

( அல்லது )

ஆ) மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை

                                               

3

பகுதி – 3

பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36.

உவமை அணி. வந்துள்ளது

உவமை அணியில் உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.

        உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது

          உவமேயம் : கோலோடு நின்றான் இரவு

          உவமஉருபு : போலும்

          விளக்கம்   : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான ஆயுதங்களைக்கொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம்.

3

37

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

நாள்/தொறும்

நேர் – நிரை

கூவிளம்

2

நா/டி

நேர் – நேர்

தேமா

3

முறை/செய்/யா

நிரை – நேர் – நேர்

புளிமாங்காய்

4

மன்/னவன்

நேர் – நிரை

கூவிளம்

5

நாள்/தொறும்

நேர் – நிரை

கூவிளம்

6

நா/டு

நேர் – நேர்

தேமா

7

கெடும்

நிரை

மலர்

இக்குறளின் இறுதிச் சீர் “ மலர் “ என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

பகுதி – 4

38

  அ)

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

            முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர்

முடிவுரை :

          இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம்.

5

38

·         ஆ. தொழில் செய்வதற்கு தேவையான கருவி,அதற்கு ஏற்ப காலம்,செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·         மனவலிமை,குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·         இயற்கையான நுண்ணறிவு,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது

·         ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

5

39

·         நாள்,இடம்

·         விளித்தல்

·         கடிதச் செய்தி

·         இப்படிக்கு,

·         உறைமேல் முகவரி

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.

------------------------------------------------------------

சேலம்

03-03-2021

அன்புள்ள மாமாவுக்கு,

            நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                                    நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

பெறுதல்

            திரு.இரா.இளங்கோ,

            100,பாரதி தெரு,,நாமக்கல்.

½

½

½

2

½

1

39

ஆ.

·         அனுப்புதல்

·         பெறுதல்

·         விளித்தல்,பொருள்

·         கடிதச் செய்தி

·         இப்படிக்கு,

·         நாள்,இடம்

·         உறை மேல் முகவரி

 

-------------------------------------------------------------

அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            சுகாதாரத்துறை ஆய்வாளர் அவர்கள்,

            சுகாதாரத்துறை அலுவலகம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: மருந்து பயன்பாட்டு தேதி முடிவடைந்து, அதனை விற்பனை செய்த மருத்தகம் மீது நடவடிக்கை எடுத்தல் – சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு மருந்தகத்தில் எனது தாத்தா இருமல் மருந்து வாங்கி வந்தார். அந்த மருந்தின் பயன்பாடு முடிந்து ஒரு மாதம் ஆகிறது. இத்துடன் அந்த மருந்தின் விலை இரசீது நகல் மற்றும் மருந்தினையும் இணைத்துள்ளேன். பயன்பாட்டு தேதி முடிந்து அதனை விற்பனை செய்த மருந்தகத்தின் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. இருமல் மருந்து                                                                                                                      அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

            சுகாதாரத்துறை ஆய்வாளர் அவர்கள்,

            சுகாதாரத்துறை அலுவலகம்,

            சேலம் – 636001

½

½

½

2

½

½

½

 

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி    

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

41.

படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

5

42

அ.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுவேன்

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

42

மொழிபெயர்க்க

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

 

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

1. கோடை

2. மிகவும் குளிர்ச்சியாக வீசுவதால்

3. குடக்கு

4. வடக்கு

5. காற்று வீசும் திசைகள்

 

 

பகுதி – 5

 

43

அ) குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப் படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்

 

8

 

ஆ.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

8

44.

அ.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

          மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

          எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்...

8

44

ஆ)

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பொருள்

கடற்பயணம்

முடிவுரை

 

 என உட்தலைப்புகள் இட்டு கடற்பயண நிகழ்வினை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

45

அ. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

45

ஆ.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

கொரோனா பெருந்தொற்று

தடுப்பு நடவடிக்கைகள்

விழிப்புணர்வுச் செயல்பாடுகள்

நமது கடமைகள்

முடிவுரை

உட்தலைப்புகள் இட்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

CLICK HERE TO DOWNLOAD ANSWER KEY

PLS WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post