10TH-TAMIL-ALL EXAM ONE WORDS - SALEM DT - PDF

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் – வினாக்கள்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

( பருவத்தேர்வு -2,காலாண்டு,அரையாண்டு,அலகுத் தேர்வு -4, திருப்புதல் -2 )

சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. தமிழுக்குரிய அணிகலன்________

அ) இரட்டைக் காப்பியம்          ஆ) ஐம்பெரும் காப்பியம்          இ) எட்டுத்தொகை                                  

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

அ) எம் + தமிழ் + நா     எந்த + தமிழ் + நா   இ) எந் + தமிழ் + நா              

3. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________(R) (R)

குலை வகை        மணிவகை          இலை வகை       

4. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்_______

அ) எட்டு                   ஆ) பத்து         இ) மூன்று

5. பெரிய மீசை சிரித்தார்தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?(R) (R) (R)

பண்புத்தொகை               அன்மொழித்தொகை         இ) உவமைத்தொகை

6. . ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது _______(R) (R)

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்     ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்                 ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்

அ) இருபெயரொட்டு பண்புத்தொகை             ஆ) உவமைத்தொகை           

இ) ஒற்றளபெடை          ஈ) பண்புத்தொகை

) கூவிளம் தேமா மலர்                   ) கூவிளம் புளிமா நாள்                 ) தேமா புளிமா காசு           

) புளிமா தேமா பிறப்பு

அ) 106           ஆ) 108          இ) 104           ஈ) 105

10. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?( R ) ( R )

அ) துலா                   ஆ) சீலா                   இ) குலா                  ஈ) இலா

அ) பரஞ்சோதி முனிவர்           ஆ) திரு.வி.க             இ) செய்கு தம்பி பாவலர்                   

ஈ) குமரகுருபரர்

12. விடை எத்தனை வகைப்படும்?

அ) 7    ஆ) 8   இ) 10  ஈ) 6

13. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

அ) அருமை + துணை            ஆ) அரு + துணை      இ) அருமை + இணை           ஈ) அரு + இணை

14. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும் இ) திருப்பதியும் திருச்செந்தூரும்       

ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

15. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________

அ) நாட்டைக் கைப்பற்றல்       ஆ) ஆநிரை கவர்தல்             இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

16. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது___________________ ( R )

அ) திருக்குறள்           ஆ) புறநானூறு          இ) கம்பராமாயணம்             ஈ) சிலப்பதிகாரம்

17. புறப்பொருள் எத்தனை வகைப்படும்?

அ) பத்து                   ஆ) பன்னிரெண்டு      இ) ஆறு                   ஈ) ஏழு

18.’ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் ‘ – இவ்வடிகள் குறிப்பிடுவது------------- (R) (R)

அ) காலம் மாறுவதை                                ஆ) வீட்டைத் துடைப்பதை     

இ) இடையறாது அறப்பணி செய்தலை           ஈ) வண்ணம் பூசுவதை

19. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________( R )

அ) அகவற்பா             ஆ) வெண்பா             இ) வஞ்சிப்பா            ஈ) கலிப்பா

20. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர். ( R )

அ) உதியன்;சேரலாதன்         ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்   இ) பேகன்;கிள்ளிவளவன்

ஈ) நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி

21. காசிக்காண்டம் என்பது –

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

22. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

இலையும்,சருகும்   தோகையும் சண்டும்         தாளும் ஓலையும்   சருகும் சண்டும்

23. .”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா.

 “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________ விடை. ( R ) ( R )

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல்             ஆ) அறிவினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை                     ஈ) கொளல் வினா, இனமொழி விடை

24. மலர்கள் தரையில் நழுவும். எப்போது? ( R )

அ) அள்ளி முகர்ந்தால்            ஆ) தளரப் பிணைத்தால்  இ) இறுக்கி முடிச்சிட்டால்      ஈ) காம்பு முறிந்தால்

25. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி___________ ( R ) ( R )

) உவமை    ) தற்குறிப்பேற்றம்    ) உருவகம்  ) தீவகம்

26. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது ________________

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்        

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்    

) அறிவியல் முன்னேற்றம்                                 ) வெளிநாட்டு முதலீடுகள்

27. தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக் கருவி _________

அ). ஜால்ரா      ஆ) பறை        இ) உருமி       ஈ) நாகசுரம்

28. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ______

அ) அமைச்சர், மன்னன் ஆ) அமைச்சர், இறைவன்       இ) இறைவன், மன்னன்        

ஈ) மன்னன்,இறைவன்

29. ’ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ என்னும் அடியில் பாக்கம் என்பது --------

அ) புத்தூர்                          ஆ) மூதூர்                இ) பேரூர்                          ஈ) சிற்றூர்

30. இன்சொல்- எவ்வகை தொகை நிலை?

அ) உவமைத் தொகை           ஆ) பண்புத்தொகை    இ) வினைத்தொகை             

ஈ) வேற்றுமைத் தொகை

31. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்     ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்    

இ) மருத்துவரிடம் நோயாளி           ஈ) நோயாளியிடம் மருத்துவர்

32. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்                   ஆ) அறிவியல்                     இ) கல்வி                           ஈ) இலக்கியம்

33. காலம் என்ற நூலை எழுதியவர் யார்?

அ) எடிசன்                ஆ) ஐன்ஸ்டீன்           இ) முத்துராமன்                   ஈ) ஸ்டீபன் ஹாக்கிங்

34. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?                             ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?

இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?   ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

35. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

அ) உழவு,மண்,ஏர்,மாடு           ஆ) மண், மாடு, ஏர்,உழவு            இ) ஏர், உழவு, மாடு, மண்                

ஈ) உழவு, ஏர், மண், மாடு

36. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

அ) 10            ஆ) 2             இ) 3             ஈ) 5

37. கிராம ஊழியன் இதழில் ஆசிரியராகப் பணியாற்றியவர் ________

அ) கு.ப.ராஜகோபாலன்          ஆ) உமா மகேஸ்வரி             இ) பாரதியார்            

ஈ) கண்ணதாசன்

38. மேன்மை தரும் அறம் என்பது______________________ ( R )

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது          ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                     ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

39. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று_________ ,________________வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக     ) எலிசபெத் தமக்காக

) கருணையன் பூக்களுக்காக        ) எலிசபெத் பூமிக்காக

40. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும்வினையாலணையும் பெயரும் முறையே________________ ( R )

பாடிய;கேட்டவர்     பாடல்;பாடிய         கேட்டவர்;பாடிய ஈபாடல்;கேட்டவர்

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்      ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்            ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

42. .‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-------

அ) நிலத்திற்கேற்ற விருந்து     ஆ) இன்மையிலும் விருந்து     இ) அல்லிலும் விருந்து  ஈ) உற்றாரின் விருந்து

43.  கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்                  ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                ஈ) அங்கு வறுமை இல்லாததால்

44. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________

அ) நாட்டைக் கைப்பற்றல்       ஆ) ஆநிரை கவர்தல்             இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

45. இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கூறும் நூல் ______

அ) புறநானூறு          ஆ) சிறுபாணாற்றுப்படை                 இ) கலித்தொகை       ஈ) நற்றிணை

46. மார்கழி ,தை என்பன _______

அ) கார்காலம்            ஆ) குளிர்காலம்                   இ) முன்பனிகாலம்      ஈ) பின்பனிகாலம்

47. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு        

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

48. பரிபாடல் அடியில்  விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்            ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும்                ஈ) வானத்தையும் பேரொலியையும்

49. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

50. கேட்க வேண்டிய பாடல் என்பது _______

அ) எழுவாய் தொடர்     ஆ) கூட்டு நிலை பெயரெச்சம்            இ) உரிச்சொல் தொடர்           

ஈ) வேற்றுமை

51. துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்

அ) பாரதிதாசன்          ஆ) கு.பா.ரா               இ) பெருஞ்சித்திரனார்           ஈ) பாவாணர்

52. எனது போராட்டம் – என்னும் தன் வரலாற்று நூலை எழுதியவர் ______

அ) பாரதியார்            ஆ) ம.பொ.சிவஞானம்  இ) கு.அழகிரி சாமி                ஈ) இராஜம் கிருஷ்ணன்

CLICK HERE TO GET PDF


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post