9TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 3RD WEEK

  

நாள்               :           13 -02-2023 முதல் 17 -02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              மூன்றாம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     தாய்மைக்கு வறட்சி இல்லை

அறிமுகம்                 :

Ø  உனது வீட்டில் உனது தாய் செய்யும் செயல்கள் யாவை? நீ உனது தாய்க்கு எவ்வகையில் உதவியாக இருப்பாய்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                                   :

Ø  மனிதம் சார்ந்த  படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனித நேயப் பண்புடன் வாழ்தல்

Ø  நூலின் மதிப்புரைகளைப் படித்தறிந்து அதுபோல எழுத முனைதல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  மாணவர்களை வாசிக்க வைத்தல்

Ø  மனிதம் குறித்த வாழ்வியல் கூறுகளைக் கூறல்

Ø  பாடப்பகுதியில் உள்ள கதையின் மையக் கருத்தைக் கூறல்

Ø  தாய்மையைப் போற்றும் பண்பை மாணவர்களுக்கு வளர்த்தல்.

கருத்து  வரைபடம்                   :

தாய்மைக்கு வறட்சி இல்லை


 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

தாய்மைக்கு வறட்சி இல்லை

Ø  ஆசிரியர் : சு.சமுத்திரம்

Ø  குல்பர்கா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குடும்பம்

Ø  குடிசை வீடு வாசல் கிடையாது.

Ø  இரண்டு சடை நாய் குட்டிகள்

Ø  ஜீப்காரர் பாதி பிரியாணியை கொடுத்தல்

Ø  வயிற்றில் பசி முள் குத்தியது.

Ø  அதிகாரி பேசிய தமிழ் வார்த்தைகள் அவளுக்கு புரியவில்லை

Ø  நாய்க்குட்டிக்கு சிறு கவளமாய் ஊட்டுதல்

Ø  தட்டில் உணவு குறைய குறைய தாய்மை கூடியது.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  கதையின் ஆசிரியர் பற்றி  அறிதல்

Ø  மனித நேயம் பற்றி அறிதல்

Ø  கதையின் தன்மையினை உணர்தல்

Ø  கதையின் மையக் கருத்தை உணர்தல்

Ø  தாய்மையைப் போற்றுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற கதையின் ஆசிரியர் __________

Ø  கதையின்  எல்லை____________

MOT

Ø  மனித நேயம் இக்கதையில் எவ்வாறு வெளிப்படுகிறது?

Ø  பிறருக்கு உதவி செய்வதில் மொழியின் பங்கு யாது?

HOT

Ø  மனித நேயம்  வெளிப்படுத்தும் ஏழைத்தாயின் கதாப்பாத்திரம் குறித்து கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø   T947 மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புகளைத் தக்க சூழலில் உணர்ந்து பின்பற்றுதல்.

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post