9TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 3RD WEEK

 

நாள்               :           18-01-2023 முதல் 20-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              மூன்றாம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. மகனுக்கு எழுதிய கடிதம்

                                         2. யாப்பிலக்கணம்

அறிமுகம்                 :

Ø  ஊரில் உள்ள உன் உறவினருக்கு எவ்வாறு கடிதம் எழுதுவாய்? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

Ø  தமிழ் எழுத்துகளில் குறில், நெடில்,ஒற்று எழுத்துகளை கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                                   :

Ø  கடித இலக்கியவகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்.

Ø  செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து,அலகிடல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  கடிதம் எழுதும் முறையைக் கூறல்

Ø  கடிதம் எழுதும் படிநிலைகளைக் கூறல்

Ø  நா.முத்துக்குமார் பற்றிக் கூறல்

Ø  கடிதத்தில் கூறப்பட்டுள்ள மையக் கருத்தைக் கூறல்

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளைக் கூறல்

Ø  யாப்பின் உறுப்புகள் பற்றிக் கூறல்

Ø  யாப்பின் உறுப்புகளை விளக்கிக் கூறல்

Ø  அலகிடும் முறைகளைக் கூறல்

கருத்து  வரைபடம்                   :

மகனுக்கு எழுதியக் கடிதம்

 




யாப்பிலக்கணம்

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

மகனுக்கு எழுதிய கடிதம்

Ø  கடிதம் எழுதும் பாங்கு

Ø  நா. முத்துக்குமார் தனது மகனுக்கு எழுதிய கடிதம்

Ø  உலகின் மிகப்பெரிய இன்பம் மெய் தீண்டல்.

Ø  இந்த உலகில் இப்படி தான் அழ வேண்டும், சிரிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கிறது.

Ø  கல்வியில் தேர்ச்சிக் கொள்.

Ø  எங்கும், எதிலும் அன்பாய் இரு.

Ø  உழைக்கத் தயங்காதே.

Ø  உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.

Ø  கிடைத்த வேலையை விட பிடித்த வேலையை செய்

Ø  உறவுகளை விட மேலானது நட்பு.

யாப்பிலக்கணம்

Ø  யாப்பின் உறுப்புகள் : 6

Ø  எழுத்து(3) : குறில், நெடில்,ஒற்று

Ø  அசை (2) : நேர், நிரை

Ø  சீர்(4) : ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்

Ø  தளை(7) : நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கவித்தளை, ஒன்றிய வஞ்சித் தளை, ஒன்றா வஞ்சித் தளை

Ø  அடி(5) : குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடி

Ø  தொடை : எதுகை, மோனை, இயைபு

Ø  அலகிடும் முறை

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  கடிதம் எழுதும் முறை அறிதல்

Ø  கடிதம் எழுதும் நோக்கம் அறிதல்

Ø  கடித படிநிலைகளை அறிதல்

Ø  தனது மகனுக்கு எழுதிய கடிதத்தின் கருத்தை உணர்தல்

Ø  உலகினில் எப்படி வாழ வேண்டும் என்பதனை அறிந்து பின்பற்றுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  கடிதம் எழுதும் வகைகள் யாவை?

Ø  யாப்பின் உறுப்புகள் யாவை?

MOT

Ø  உலக வாழ்வு குறித்து நா. முத்துக்குமார் கூறியது யாது?

Ø  அசை என்பது யாது? அதன் வகைகள் யாவை?

HOT

Ø  உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

Ø  மனப்பாடக் குறளில் ஏதேனும் ஒரு குறளை அலகிடுக

கற்றல் விளைவுகள்                  :

Ø  T9042 செப்பமான மொழிநடையைப் படித்துச் சுவைத்தல், பல்வேறு கடித உத்திகளையும் வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.

Ø  T9043 தலைப்பை மையமிட்டுக் கவிதை புனைதல்/பாடல் எழுதுதல்.

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post