9TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 2ND WEEK

 

நாள்               :           09-01-2023 முதல் 13-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              இரண்டாம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. தாவோ தே ஜிங்

                                         2. யசோதர காவியம்

அறிமுகம்                 :

Ø  உன்னிடம் எவையெவை உண்டு. எவையெவை இல்லை? என்பதனைக் கூறுக

Ø  நீங்கள் யாருக்கெல்லாம் உதவி செய்துள்ளீர்கள்? எப்படிப்பட்ட உதவி செய்துள்ளீர்கள் என்பதனைக் கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி

நோக்கம்                                   :

Ø  பிறநாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளுதல்

Ø  தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறல்

Ø  பிறநாட்டு அறிஞர்களின் கருத்தினைக் கூறல்

Ø  மொழிப்பெயர்ப்புக் கவிதையில் காணப்படும் தத்துவத்தைப் பின்பற்றுதல்

Ø  வழிநூல் என்பதனை அறிதல்

Ø  சங்க இலக்கியம் காட்டும் அறத்தைப் பின்பற்றுதல்

Ø  நன்னெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உணர்தல்.

கருத்து  வரைபடம்                   :

தாவோ தே ஜிங்

 




யசோதர காவியம்

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

தாவோ தே ஜிங்

Ø  இல்லை என்ற வடிவத்தை வரையறை செய்கிறது இந்த கவிதை

Ø  இன்மையால் தான் பயன் பெறுகிறோம்.

Ø  வெற்றிடம் பயன்படுகிறது.

Ø  எதையும் புறக்கணிக்கக் கூடாது.

Ø  லாவோட்சு சீன மெய்யிலாளர்

Ø  நம்முடைய செயல் பயன் தரக் கூடிய செயலாக இருக்க வேண்டும்.

யசோதர காவியம்

Ø  நம்முடைய செயல் பயந்தரக்கூடிய செயலாக இருக்க வேண்டும்.

Ø  சினத்தை நீக்க வேண்டும்.

Ø  மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்

Ø  நன்னெறிகளைக் காத்தல் வேண்டும்.

Ø  ஐஞ்சிறுகாப்பியங்களுல் ஒன்று யசோதர காவியம்

Ø  சமண முனிவரால் இயற்றப்பட்டது.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மெய்யியல் என்பதனை அறிதல்

Ø  இல்லை என்னும் வடிவம் உணர்தல்

Ø  வெற்றிடம் தேவையான ஒன்று

Ø  இன்மை என்று எதையும் புறக்கணிக்கக் கூடாது என அறிதல்

Ø  நம்முடைய செயல்கள் நம்மை தரும் செயலாக இருக்க வேன்டுமென உணர்தல்

Ø  தீய பண்புகளை நீக்க வேண்டுமானால் கோபத்தை நீக்க வேண்டும்

Ø  மெய்யறிவு நூல்களை அறிதல்

Ø  வாழ்வில் அறச்சிந்தனைகளை போற்றுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  லாவோட்சு எந்த நாட்டைச் சேர்ந்தவர் ________

Ø  ஐஞ்சிகாப்பியங்களுள் ஒன்று _________

MOT

Ø  தாவோ தே ஜிங் இன்னொறு பக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?

Ø  யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

HOT

Ø  பிறமொழியைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக

Ø  யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  9040 – மொழிபெயர்ப்பு மொழியின் வாயிலாக தத்துவங்களைப் புரிந்துக்கொண்டு எதிர்வினையாற்றுதல்

Ø  9041 – சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post