9TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 1ST WEEK

 

நாள்               :           30 -01-2023 முதல் 03 -02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              முதல்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     அக்கறை

அறிமுகம்                 :

Ø  தாய் தன்னுடைய குழந்தைக்கு ஏதேனும் இடர் நேர்ந்தால் துடிப்பது ஏன்?

Ø  தந்தை தன்னுடைய குடும்பத்திற்கு இரவு பகல் பாராமல் உழைப்பது ஏன்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                                   :

Ø  புதுக்கவிதைகளைப் படிப்பதால், தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்

Ø  மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனித நேயப் பண்புடன் வாழ்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  புதுக்கவிதையின் தோற்றம் பற்றி கூறுதல்

Ø  கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  புதுக்கவிதை மூலம் மனித நேயம் வளருவதைக் காணலாம்

Ø  மனிதம் நசுங்கி விட்டத்தை கவிதையின் மூலம் உணர்த்துதல்

Ø  கவிதை நடைமுறை வாழ்வியலோடு  தொடர்புக் கொண்டுள்ளமையைக் கூறல்

கருத்து  வரைபடம்                   :

அக்கறை


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

அக்கறை

Ø  ஆசிரியர் : கல்யாண்ஜி

Ø  இயற்பெயர் : கல்யாண சுந்தரம்

Ø  ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு  சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  உரைநடையில் கவிதை எழுதுவதை பாரதியார் கொண்டு வந்தார்

Ø  அவற்றின் தொடர்ச்சியாக வந்த கவிதைகள் புதுக்கவிதைகள்

Ø  புதுக்கவிதைகள் மனிதத்தை வெளிப்படுத்துகின்றனவாக அமைகின்றன.

Ø  தக்காளிக் கூடை தெருவில் சரிந்து உருண்டது.

Ø  அதனை கண்டும் காணாமல் மக்கள் செல்கின்றனர்,

Ø  இதில் பழங்களை விட நசுங்கியது அடுத்தவர் மீதான அக்கறை

Ø  மனிதத்தை அழகாக வெளிப்படுத்திக்கிறார்.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  புதுக்கவிதைப் பற்றி அறிதல்

Ø  புதுக்கவிதையின் தோற்றம் குறித்து அறிதல்

Ø  புதுக்கவிதையின் வாயிலாக மனிதம் வெளிப்படுவதை உணர்தல்

Ø  பாடலை சீர் பிரித்து வாசித்தல்

Ø  பாடலின் மையக் கருத்தை உணர்தல்

Ø  பாடலில் வெளிப்படுத்தப்படுள்ள மனிதம் குறித்து கலந்துரையாடுதல்

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  புதுக்கவிதை என்பது யாது?

Ø  கல்யாண்ஜி அவர்களின் இயற்பெயர் என்ன?

MOT

Ø  புதுக்கவிதையின் மூலம் வெளிப்படும் மனிதம் குறித்துக் கூறுக.

Ø  பாடலில் காணப்படும் நயங்கள் யாவை?

HOT

Ø  பழங்களை விட நசுங்கி போனது – பொருள் கூறுக

Ø  மனிதம் குறித்து நீ  அறிந்த வேறு கவிதை ஒன்றை கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  T945 தற்காலக் கவிதைப் போக்கினை அறிந்து புதுகவிதைகளைப் படித்தல், அவை போல எழுதுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post