6TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23 - 1ST WEEK

 

நாள்               :           02-01-2023 முதல் 06-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              முதல்   வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. பாரதம் அன்றைய நாற்றங்கால்

                                         2. தமிழ்நாட்டில் காந்தி

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் சுற்றுலா  சென்று வந்த இடங்கள் குறித்து கூறுக

Ø  நீங்கள் அறிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைக் கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  இந்திய நாட்டின் சிறப்புகளை உணர்தல்

Ø  வாழ்வில் எளிமையின் சிறப்பை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  நாட்டின் இயற்கை வளங்களை பேணுதல்

Ø  நாட்டின் வளங்களைப் பாதுகாத்தல்

Ø  நாட்டின் வளங்களை, இந்திய தாய்க்கு ஒப்பிடல்

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  காந்தியின் எளிமையைப் போற்றுதல்

Ø  காந்தி எளிமைக் கோலம் பேணுவதற்கான காரணம் கூறல்

Ø  எளிமையின் சிறப்பைப் போற்றுதல்

கருத்துரு வரைபடம்                 :

பாரதம் அன்றைய நாற்றங்கால்





தமிழ்நாட்டில் காந்தி

 

 

 

விளக்கம்  :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

Ø  ஆசிரியர் : தாராபாரதி

Ø  நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு.

Ø  திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது

Ø  கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

Ø  புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன.

Ø   அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது

Ø  அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

தமிழ்நாட்டில் காந்தி

Ø  1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.

Ø  1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

Ø  பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

Ø  அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

Ø  உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்

Ø  தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

Ø  திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.

Ø  உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார்.இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்                                             

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

பாரதம் அன்றைய நாற்றங்கால்


தமிழ்நாட்டில் காந்தி



செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   நாட்டின் இயற்கை வளங்களை அறிதல்

Ø   இயற்கை வளங்களை பாதுகாத்தல்

Ø   பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø   பாடலின் நயங்களை அறிதல்

Ø   காந்தியின் சிறப்பை உணர்தல்

Ø   காந்தியின் எளிமையைப் போற்றுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______

Ø  காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ________

MOT :

Ø  பாடலில் இடம் பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் கூறுக.

Ø  காந்தியடிகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வு கூறுக.

HOT

Ø  நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை யாவை?

Ø  காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?

கற்றல் விளைவுகள்                  :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

Ø  T607 மற்றவர்களின் மொழிகள் உணவுப் பழக்கங்கள் வாழ்க்கை நிலை அவற்றில் காணப்படும் வேற்றுமைகள் அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றி பேசுதல் .

தமிழ்நாட்டில் காந்தி

Ø  T604 வானொலி, தொலைக்காட்சி ,செய்தித்தாள்  போன்றவற்றில் தாங்கள் கேட்ட பார்த்த படித்த செய்திகளை தங்களின் சொந்த மொழி நடையில் கூறுதல்

Ø  T610 பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துக்களை பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நாடு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் எழுதி வருக.

Ø  காந்தியடிகளின் அறப்போராட்டங்களின் பெயர்களை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post