10TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 2ND WEEK

 

நாள்               :           12- 12-2022 முதல்  16  -12-2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             இயல்கள் :  7 , 8 , 9

பொது நோக்கம்:-

o    அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o    நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o    நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o    உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்

o    பாடலின் நயங்களை அறிதல்

o    பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o    பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o    மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

முக்கிய வினாக்கள்:

·         தூசும்,துகிரும், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம், தேம்பாவணி, காலக்கணிதம் மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்

·         பாசவர்,வாசவர்,பல் பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

·         வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

·         மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

·         காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

·         புறத் திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

·         “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம் சுட்டிப் பொருள் விளக்குக..

·         நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

·         இக்குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

 

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post