9TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 2ND WEEK

 

நாள்               :           07-11-2022 முதல் 11-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு

                                        2. சீவக சிந்தாமணி

அறிமுகம்                 :

Ø  நமது இந்திய இராணுவப் படையில் உங்களது தெரிந்த யாராவது இருக்கிறார்களா? நமது இந்திய இராணுவப் படையில் சேர்வதற்கான தகுதிகள் யாவை? என்பன போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை அறிமுகம் செய்தல்

Ø  ங்கள் ஊரில் காணப்படும் சுற்றுலாப் பகுதிகள் யாவை? அங்கு சென்றுள்ளீர்களா? என்பன போன்ற வினாக்கள கேட்டு வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, வில்லு இசைக் கருவி, பானை

நோக்கம்                                   :

·         விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்

·         இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø     ந்திய இராணுவத்தின் முக்கியத்துவத்தை கூறுதல்.

Ø     இந்திய தேசிய இராணுவம் உருவானதற்கு நோக்கம் பற்றிக் கூறுதல்.

Ø     இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்களின் பங்கு பற்றி விளக்குதல்.

Ø     தேசத்தின் முக்கியத்துவத்தை விளக்குதல்

Ø     சீவகன் வரலாற்றை சுருக்கமாக காணுதல்.

Ø     சீவக சிந்தாமணியின் நூற் குறிப்பு மற்றும் மையக் கருத்தினைப் பற்றி கூறுதல்

Ø     ஏமாங்கத நாட்டின் வளத்தினை விளக்குதல்

Ø     மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்                   :

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு

 




 சீவக சிந்தாமணி

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

·         மோகன் சிங் என்பவர் தலைமையில் 1942 பிப்ரவரி 15 ஆம் நாள் இந்திய தேசிய இராணுவம் ( ஐ.என்.ஏ ) என்ற படை உருவாக்கப்பட்டது.

·         நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 09-07-1943ஆம் தேதி பதவியேற்றார். 

·         இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்,ஆத்மாவும் தமிழர்கள் தான் – தில்லான். ( இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவர் )

·         தமிழகத்திலிருந்து பெரும்ப்டையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலு சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன்,முத்துஇராமலிங்கனார்.

·         டோக்கியோ கேடட்ஸ் – வான்படைப்பிரிவு

·         இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர்.இலட்சுமி

·         மலேயாவில் உள்ள தமிழர்களி இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது – சர்ச்சில்

·         மரணத்தைப் பெரியதாக தமிழர்கள் கருதவில்லை

·         விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மன நிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றிற்கான விலை துன்பமும்,தியாகமும் தான் - நேதாஜி

சீவக சிந்தாமணி

·         சீவக சிந்தாமணி நூற் குறிப்பு அறிதல்

·         சீவகனின் வரலாற்றை சுருக்கமாக அறிதல்

·         இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பது சீவக சிந்தாமணியின் மையக் கருத்து.

·          ஏமாங்கத நாட்டின் வளத்தினை அறிதல்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு


சீவக சிந்தாமணி


சீவக சிந்தாமணி - மனப்பாடப் பாடல்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø     இந்திய விடுதலைப் போரில் இராணுவத்தின் முக்கியத்துவம் பற்றி அறிதல்

Ø     இராணுவத்தின் முக்கியச் செயல்பாட்டினை உணர்தல்.

Ø     இந்திய இராணுவத்தில் தமிழர்களின் பங்கினைப் போற்றுதல், அவர்களின் வீரத்தை மதித்தல்.

Ø     சீவகசிந்தாமணி பற்றி அறிதல்

Ø     சீவக சிந்தாமணி உணர்த்தும் ஏமாங்கத நாட்டின் வளத்தைப் போற்றுதல்

Ø     மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்.

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  இந்திய தேசிய இராணுவம் __________இன் தலைமையில்  ______ உருவாக்கினார்

Ø  சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

MOT

Ø  டோக்கியோ கேடட்ஸ் பற்றி எழுதுக

Ø  சீவக சிந்தாமணி மணநூல் என அழைக்கப்பட காரணம் யாது?

HOT

Ø  இந்திய இராணுவப் படையில் சேர தகுதிகள் யாவை?

Ø  ஏமாங்கத நாட்டில் எவை எவை ஆயிரம் உள்ளன?

கற்றல் விளைவுகள்                  :

Ø  விடுதலைப்போரில் தமிழர்கள் ஆற்றியத் தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல், அதனை மொழியின் வாயிலாக வெளிப்படுத்துதல்,சமூகத்திற்கு தம்மால் இயன்ற பணிகளை அளிக்கத் தாமாக முன் வருதல்

Ø  பெருங்காப்பியம் காட்சிப்படுத்தியுள்ள செழிப்பான நாட்டு வளத்தினை மொழிவழி பெற்றுச் சுவைத்தல், சொல்வளங்களைப் பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post