9TH - TAMIL - MIDTERM - ANSWERKEY - PDF - SALEM DT

  

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு - 2022

சேலம் மாவட்டம்

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

 விடைக்குறிப்பு

காலம் :1.30 மணி                                                                                 மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 7

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. முத்துலட்சுமி அம்மையார்

1

2.

ஆ. சாவித்திரிபாய் பூலே

1

3.

இ. பாரதிதாசன்

1

4.

ஆ. களர்நிலம்

1

5.

அ. மாமல்லபுரம்

1

6.

இ. கெடுதல்

1

7.

ஆ. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

1

பகுதி – 2

8

பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

2

9.

·         போரில் விழுப்புண் பட்டு இறந்தவருக்கு நடப்படும் கல், நடுகல்.

·         அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்படும்.

2

10

·           இசைத்தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

2

11

          சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் சாகும் வரை உள்ள நோய்

2

12..

·         திருக்குறள்

·         பரமார்த்த குரு கதைகள்

·         நீதிகதைகள்

·         தலைவர்கள்

2

13

·         விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்

·         தோன்றல், திரிதல், கெடுதல்

2

14

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

2

15

இடிகுரல் – உவமைத்தொகை

பெருங்கடல் – பண்புத் தொகை

 

பகுதி – 3

16

முழு உருவச் சிற்பங்கள் : சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும்.

புடைப்புச் சிற்பங்கள் : உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி  அமைக்கப்பட்ட சிற்பங்கள்

3

17

Ø  விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.

Ø  கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.

Ø  கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

Ø  இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது

3

18

Ø  ஒளவையார்

Ø  ஒக்கூர் மாசாத்தியார்

Ø  காவற்பெண்டு

Ø  ஆதிமந்தி

Ø  பாரிமகளிர்

Ø  நச்செள்ளையார்

3

19.

அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.

3

20

அ. இல்லத்தின் அருகே கூரை வேய்ந்தனர்

ஆ. அணில் பழம்  தின்றது.

இ. நேற்று தென்றல் காற்று வீசியது.

3

பகுதி – IV

21

கல்லிடைப் பிறந்த ஆறும்

  கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று

  முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்புக் காக்கும்

   நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

  வஞ்சியும் மருதம் பூக்கும்

 

5

22

அனுப்புநர்

         க. இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் உயர்நிலைப்பள்ளி,

        கோரணம்பட்டி,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021                 தங்கள்  உண்மையுள்ள,

                                                  க.இளவேந்தன்.

                                                 (மாணவர் செயலர்)

இடம் : கோரணம்பட்டி                                                                                                            

                                                                                                                                                            

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001.

 

5

23

அ. மா பெரும் பொதுக்கூட்டம்

ஆ. கடி விடுதும்

இ. கடி மனை

ஈ. வாள் நுதல்

உ. சால சிறந்தது

.

 

5

 

பகுதி – V

 

24

மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o    தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

o   சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

o    அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன் இவர் எழுதிய நூல்கள்

 

7

24

குறிஞ்சி :

·         அருவிகள் பறை போல் ஒலி எழுப்பும்.

·         பைங்கிளிகள் தமிழிசை பாடும்.

·         மயில்கள் தோகை விரித்தாடும்.

·         இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

·         குறிஞ்சி நிலம் எங்கும் மணம் கமழ்ந்து இருக்கும்.

முல்லை :

·         நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், வண்டுகளும் பாடும்.

·         ஆயர்கள் முக்குழல் இசையால் மேயும் பசுக்களை ஒன்று சேர்ப்பர்

·         முதிரை,சாமை,குதிரைவாலி,நெல் இவற்றை குன்று போல் குவித்து வைப்பர்.

பாலை :

·         செந்நாய் கடுமையான வெயிலில் நின்று தனது நிழலில் குட்டிகளை இளைப்பாறச் செய்யும்

·         சிறுவர்கள் பாலைக்காயை கோலினால் அடிக்கும் சப்தம் கேட்டு பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும்

மருதம் :

·         காஞ்சி,வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும்.

·         வைக்கோற் போர் மீது ஏறி சிறுவர்கள் தென்னை இளநீரை பறிப்பர்.

நெய்தல்

·         பவளங்களையும், முத்துகளையும் மலைபோல் கடற்கரையில் குவித்து வைப்பர்.

·         காற்றில் சிறகினை உலர்த்திய தும்பி பெண்ணின் முகத்தை நோக்கிப் பறக்கும். இது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சி போல் உள்ளது.

7

25

·         இசை மொழியினைக் கடந்தது.

·         ஆங்கில மொழி அறிந்தவர் போல்ஸ்கோ

·         வக்கீல் மணி வீட்டிற்கு நாதசுவர வித்துவான் மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்.

·         வக்கீல் மணி தன்னுடைய சங்கீத கோஷ்டி 25 பேரையும் அறிமுகம் செய்தார்.

·         நாதசுர வித்வான் ஆலாபனம் செய்து, கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         போல்ஸ்காவின் முகத்தில் புன் முறுவல். கண்களில் ஆனந்த கண்ணீர்.

·         நாதசுர வித்துவான் அடுத்து ‘ சாமா ராகம் ‘ பாடினார்.

·         போல்ஸ்காவின் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது.

·         அடுத்து சாந்தமுலேகா என்னும் கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         இந்த இராகத்தில் போல்ஸ்கா லயித்துப் போய்விட்டான்.

·         போல்ஸ்கா, நாதசுர வித்வான் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ கடவுள் நர்த்தனமாடுகிற விரலுக்கு முத்தமிடுகிறேன்’ என்றான்.

·         இக்கதையின் மூலம் இசைக்கு நாடு,மொழி,இனம் என்பது இல்லை என்பதை உணரலாம்.

 

7

25

குறிப்புச் சட்டம்

முன்னுரை

கல்வி

பெண்கல்வி

சமூக மாற்றம்

அரசின் ஒத்துழைப்பு

சிறப்பு

சாதனைப் பெண்கள்

முடிவுரை

 

மேற்கண்ட குறிப்பில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கவும்

7


 ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

CLICK HERE TO GET PDF

WAIT FOR 15 SECONDS

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post