8TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 5TH WEEK

 

நாள்               :           28-11-2022 முதல் 02-12-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              ஐந்தாம்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. ஒன்றே குலம்

                                         2. மெய்ஞ்ஞான ஒளி

அறிமுகம்                 :

Ø  இன்றைய சூழலில்  மனித நேயம் எவ்வாறு செயல்படுகிறது?

Ø  இன்றும் மனிதர்களிடையே உயர்வு,தாழ்வு பார்க்கும் சிந்தனை இருக்கிறதா? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

Ø  நீங்கள் யாருக்கேனும் உதவி செய்துள்ளீர்களா? உங்களுக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா? என்பன போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  அறநெறிகளை  கூறும் நூல்களை கற்று அவைக் கூறும் கருத்துகளை பின்பற்றுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  செய்யுள் பகுதிகள் கூறும் கருத்துகளை அன்றாட வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø  அறநெறி கருத்துகளை பின்பற்ற வலியுறுத்தல்

கருத்து  வரைபடம்                   :

ஒன்றே குலம்



மெய்ஞ்ஞான ஒளி


விளக்கம்  :

( தொகுத்தல் )

ஒன்றே குலம்

Ø  மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தவர். இறைவன் ஒருவனே.

Ø  நல்வழியை நாடி செல்லுங்கள்

Ø  கோயிலில் உள்ள இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது பலன் இல்லை

Ø  இல்லாத அடியார்களுக்கு செய்யும் தொண்டு அது இறைவனுக்கே செய்யும் தொண்டு

Ø  ஆசிரியர் : திருமூலர்

Ø  அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அறியப்படுபவர்

Ø  திருமந்திரம் தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கப்படுகிறது.

 

                            மெய்ஞ்ஞான ஒளி

·         உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்

·         உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய் க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.

·         ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும்

·         நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந் து அருள்செய்வாயாக.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

                               ஒன்றே குலம் 


                                    மெய்ஞ்ஞான ஒளி 

                                                  


மாணவர் செயல்பாடு                     :

Ø  பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  செய்யுளில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளை அறிதல்

Ø  அறக்கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø  அறக்கருத்துகளை தமது வாழ்வில் பின்பற்றுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  இறைவன் என்பவன் எல்லோருக்கும் _________

Ø  இரக்க உணர்வு என்பது யாது?

MOT

Ø  யாருக்கு நாம் அச்சப்படத் தேவையில்லை?

Ø  மனதை நல்வழித்தும் வழிகளைக் கூறுக

HOT

Ø  அன்றாட வாழ்வில் பிறருக்கு நீங்கள் எவ்வகையான உதவியை செய்வீர்கள்?

Ø  ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் சிலக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

ஒன்றே குலம் , மெய்ஞ்ஞான ஒளி


·         T812 படிக்கும்போது படைப்பாளியின் சொற் சித்திரத்தினை நயம்பட பாராட்டி தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல் ( பேச்சு எழுத்து, பிரெய்லி எழுத்து .சைகை மொழி வழியில்)

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களை எழுதுக.

Ø   ஐம்பொறிகளின் செயல்பாடுகளை படத்தொகுப்பாக உருவாக்குக.

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post