7TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 5TH WEEK

  

நாள்               :           28-11-2022 முதல் 02-12-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :             ஐந்தாம் வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. கீரைப்பாத்தியும்,குதிரையும்

                                        2. பேசும் ஓவியங்கள்

அறிமுகம்                                 :

Ø   தற்கால உரைநடையில் சிலேடை நயங்களை அமைத்து பேசும் கி.வ.ஜகந்நாதனின் சில சிலேடை நயங்களைக் கூறி அறிமுகம் செய்தல்

Ø  ஓவியங்களின் பல்வேறு வகைப்பட்ட படங்களை மடிக்கணினி வாயிலாக காண்பித்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  இருபொருள் தரும் சிலேடையில் அலமந்த பாடலின் சொல் நயங்களை உணர்தல்

Ø  ஓவியக் கலையின் மேன்மையும், அது மனித வாழ்வோடு  இணைந்துள்ள நுட்பத்தையும் உணர்ந்து போற்றுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  செய்யுளினை வாசித்தல்

Ø  செய்யுளில் மையக் கருத்தை கூறல்

Ø  செய்யுளில் அமைந்துள்ள சிலேடை நயத்தைக் கூறல்

Ø  செய்யுளின் நயத்தை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø  உரையாடல் வடிவில் அமைந்துள்ள பாடப்பகுதியினை மாணவர்களை பங்கேற்க வைத்து நடிக்க வைத்தல்

Ø  ஓவியங்களின் தன்மையைக் கூறல்

Ø  ஓவியங்கள் எவ்வாறு மனித வாழ்வியலோடு இணைந்துள்ளது என்பதனை நடைமுறை உதாரணங்களைக் கூறி ஒப்பிடல்

நினைவு வரைபடம்                   :

                                                                                           கீரைப்பாத்தியும், குதிரையும்


பேசும் ஓவியங்கள்

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

கீரைப்பாத்தியும், குதிரையும்

கீரைப்பாத்தியில்

Ø  மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை

Ø  வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும். கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண் டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும். இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

பேசும் ஓவியங்கள்

Ø  ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும்

Ø  ஓவியக்கலை நுண்கலைகளுல் ஒன்று

Ø  குகை ஓவியல் – கோட்டோவியம்

Ø  சுவர் ஓவியம் - தஞ்சைப் பெரியகோயிலில் சுவர் ஓவியங்கள் ஏராளமாகக் காண முடியும்.

Ø  துணி ஓவியம் - துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் என பல பெயர்களில் அழைக்கப்படும்.

o   தற்காலத்தில் துணி ஓவியம் “ கலம்காரி ஓவியங்கள் “ என தமிழகத்திலும், ஆந்திராவிலும் வரையப்படுகிறது.

Ø  ஓலைசுவடி ஓவியம் – கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சாகவும் வரையப்பட்டது.

Ø  செப்பேட்டு ஓவியம் – வரைகோடு ஓவியம்

Ø  தந்த ஓவியம், கண்ணாடி ஓவியம், தாள் ஓவியம், கருத்துப்பட ஓவியம், நவீன ஓவியம்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

கீரைப்பாத்தியும் குதிரையும் 



பேசும் ஓவியங்கள்



மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

o  செய்யுளினை வாசித்தல்

o  புதிய சொற்களை அடையாளம் கண்டு பொருள் அறிதல்

o  பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

o  ஓவியங்களை தன்மையை அறிதல்

o  பங்கேற்று நடித்தல்

o  நிறுத்தற் குறி ஏற்றாற் போல் உணர்வுடன் பேசுதல்

o  ஓவியங்களை நடைமுறை வாழ்வில் எவ்விதம் பயன்படுகிறது என்பதனை உணர்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  ஆறு என்ற சொல்லின் இரு பொருளைக் கூறுக

Ø  கோட்டோவியம் என்பதனை பிரித்துக் கூறுக

MOT

Ø  கீரைப்பாத்தியும், குதிரையும் எவ்வாறு ஒத்திருக்கின்றன?

Ø  செப்பேடுகளில் எவ்வாறு ஓவியம் வரையப்பட்டது?

HOT:

Ø  நீங்கள் குதிரையை எவற்றோடு ஒப்பிடுவீர்கள்?

Ø  தந்த ஓவியங்கள் கேரளாவில் மட்டும் அதிகம் காணப்படுவதேன்?

கற்றல் விளைவுகள்  :

Ø  702 – ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும் அறிதல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  இரு பொருள் தரும் சொற்களை எழுதி வருக

Ø  உனக்கு பிடித்த ஓவியம் ஒன்றை வரைந்து வருக

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post