10TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 2ND WEEK

  

நாள்               :           07-11-2022 முதல் 11-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :               இரண்டாம் வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. ஜெயகாந்தம்

                                        2. சித்தாளு

அறிமுகம்                 :

Ø  ஜெயகாந்தம் அவர்களின் குறிப்பினையும், அவரின் படைப்புகளில் உள்ள ஒரு கதையும் கூறி  பாடப்பொருளை அறிமுகம் செய்தல்

Ø  அன்றாட வேலைகளை செய்யும் நபர்களின் முக்கியத்துவத்தைக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்

Ø  மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø     ஜெயகாந்தன் குறித்து அறிமுகம் செய்தல்

Ø     ஜெயகாந்தன் படைப்புகளை கூறல்

Ø     ஜெயகாந்தன் சிறப்புகளையும், அவர் படைத்த நூல்களுக்கு கிடைத்த விருதுகளையும் கூறல்.

Ø  தர்க்கத்திற்கு அப்பால் கதையின் மையக் கருத்தினை கூறல்

Ø  நாகூர் ரூமி பற்றி கூறல்

Ø     சராசரி மனிதர்களின் மன இயல்புகளை எடுத்துரைத்தல்

கருத்து  வரைபடம்                   :

ஜெயகாந்தம்



சித்தாளு



 

விளக்கம்  :

( தொகுத்தல் )

ஜெயகாந்தம்

Ø  ஜெயகாந்தன் எதற்காக எழுதுகிறார் ?

Ø  மற்றவர்களின் பார்வையில் ஜெயகாந்தன் எவ்வாறு வெளிப்படுகிறார்?

Ø  ஜெயகாந்தன் எழுதிய நூல்களின் பட்டியல்

Ø  ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமான படைப்புகள்

Ø  முன்னுரையில் சிறப்பாக எழுதும் ஜெயகாந்தன்

Ø  ஜெயகாந்தன் அவர்களின் கவிதை ஆற்றல்

Ø  ஜெயகாந்தன் படைப்புகளில் தர்க்கத்திற்கு அப்பால் என்ற கதையினை காணல்

 

சித்தாளு

o    முகம்மது ரஃபி என்னும் இயற்பெயர் கொண்டவர் நாகூர் ரூமி

o    செங்கல் கற்கள் சுமக்கும் சித்தாளுவின் சுமைகள் கவிதையாக கொடுக்கப்பட்டுள்ளது

o    பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியது கற்காலம் தான்

o    சித்தாளுவின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது

o    நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடப்படும் கவிதை

 

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

ஜெயகாந்தம்


சித்தாளு


·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø     சிறந்த எழுத்தாளர் பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø     ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை அறிதல்

Ø     அவர் வென்ற விருதுகளை அறிதல்

Ø     தர்க்கத்தற்கு அப்பால் என்ற கதையினை உணர்தல்.

Ø     மாணவர்கள் தாங்களும் சிறந்த படைப்புகளை படைக்க முயற்சித்தல்

Ø     நாகூர் ரூமி பற்றி அறிதல்

Ø     சித்தாளு என்ற கவிதையில் சித்தாளுவின் சுமைகள் பற்றி அறிதல்

Ø     அன்றாட வேலை செய்வோரின் மன இயல்புகளை அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  ஜெயகாந்தம் என்பவர் யார்?

Ø  நாகூர் ரூமி இயற்பெயர் யாது?

MOT

Ø  தர்க்கத்திற்கு அப்பால் என்ற கதையில் மனிதம் எவ்வாறு வெளிபடுகிறது?

Ø  சித்தாளுவின் மனச்சுமைகளாக நாகூர் ரூமி கூறுவது யாது?

HOT

Ø  முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து கூறுக

Ø  உங்கள் பகுதியில் அன்றாட வேலை செய்வோரின் மன இயல்புகளை கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதைப் படித்துணர்ந்து தாமும் அதே போன்று சிந்திக்கும் ஆற்றல் பெறுதல்.

Ø  வெவ்வேறு  தளங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைப் பதிவுகளைஇலக்கியம் மூலம் படித்தல், அது போல படைத்தல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


1 Comments

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

  1. Notes of lesson ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைக்குள் கிடைக்குமானால் சிறப்பாக இருக்கும்..தே

    ReplyDelete
Previous Post Next Post