6TH - TAMIL - 2ND TERM -UNIT 1 - MOZHI THIRAN

 

மொழியை ஆள்வோம்

அ) தொடர்களை நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குங்கள்.

(எ.கா.) பாடம் படித்தான்.

வகுப்பில் பாடம் படித்தான்.

தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.

நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.

அவன் நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.

மழை பெய்தது.

மாலை மழை பெய்தது

நேற்று மாலை மழை பெய்தது

இடியுடன் நேற்று மாலை மழை பெய்தது

மின்னல் இடியுடன் நேற்று மாலை மழை பெய்தது

ஆ) இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்.

(நூல், மாலை, ஆறு, படி)

(எ. கா.) ஆடை தைக்க உதவுவது நூல் மூதுரை அற நூல்

மாலை – பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை

             ஆதவன் மாலையில் மறையும்.

ஆறு – காவிரி ஆறு மக்களின் தாகத்தை தீர்க்கிறது.

ஆறு – எனக்கு ஆறு தாள்கள் வேண்டும்.

படி – மேல்மாடிக்கு செல்ல படியில் செல்ல வேண்டும்.

       நன்கு படித்தால் வாழ்வில் முன்னேறலாம்

இ ) பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்.

ஆசிரியர்

மாணவன்

கவிதை

பாடம்

எழுதுகிறார் எழுதுகிறான் படிக்கிறார் படிக்கிறான் கற்பிக்கிறார்

ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.

ஆசிரியர் பாடம் எழுதுகிறார்

ஆசிரியர் பாடம் படிக்கிறார்

ஆசிரியர் கவிதை எழுதுகிறார்

ஆசிரியர் கவிதை படிக்கிறார்

மாணவன் பாடம் படிக்கிறான்

மாணவன் பாடம் எழுதுகிறான்

மாணவன் கவிதை படிக்கிறான்

மாணவன் கவிதை எழுதுகிறான்

ஈ) உரையாடலை நிறைவு செய்யுங்கள்.

மாணவர் : வணக்கம் ஐயா.

தலைமை ஆசிரியர் : வணக்கம் மதி, உனக்கு என்ன வேண்டும்?

மாணவர் : எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா.

தலைமை ஆசிரியர் :  எதற்காக?

 மாணவர் : என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா.

தலைமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?

மாணவர் : சேலம்

 தலைமை ஆசிரியர் : அங்கு எந்தப் பள்ளியில் சேரப் போகிறாய்?

மாணவர் : அரசு உயர்நிலைப் பள்ளி – சேலம்

 தலைமை ஆசிரியர் : உன்னுடன் யார் வந்துகிறார்?

மாணவர் : என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.

 உ) கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

(குழந்தைகள் நாள், மாணவர் நாள், ஆசிரியர் நாள், தேசிய இளைஞர் நாள், கல்வி வளர்ச்சி நாள்)

1. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்

2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் நாள்

3. அப்துல்கலாம் பிறந்த நாள் மாணவர் நாள்

 4. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் நாள்

5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் நாள்

ஊ) இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள்.

கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை,

வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்,

கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

எ) கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள்.

சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சம், பண்டம், சுண்டல், வண்டி, பந்தயம், பந்து, கற்கண்டு, தென்றல், நன்று

ஏ) பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்…” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். ”இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

 1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் --------------

 அ) பெற்றோர் ஆ) சிறுவன், சிறுமி இ) மக்கள் ஈ) ஆசிரியர்கள்

 2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?

அ) ஏழ்மை ஆ) நேர்மை இ) உழைப்பு ஈ) கல்லாமை

3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

          சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்ட உதவிபுரிய வேண்டி.

5. காமராசர் செய்த உதவி யாது?

            காமராசர் மாடியேறி சென்று பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

ஐ) கட்டுரை எழுதுக

காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை

            கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும்.

இளமைக் காலம்

          காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. 

கல்விப் பணி

            பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார்  மாணவர்கள் உயர்கல்வி பெறப் பல கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்கினார் 

 நிறைவேற்றிய பிற திட்டங்கள்

·         காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.

·         அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.

·         மாணவர்கள்பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

·         ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்

முடிவுரை

          தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்

மொழியோடு விளையாடு

அ) ‘ கல்விக்கண் திறந்த காமராசர்’ இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்

          கல்வி

          காமராசர்

          கண்

ஆ) முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.

1. முளையிலே விளையும் தெரியும் பயிர்

            விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

 2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

            கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்

 


இ) கீழ்க்காணும் கட்டங்களில் உள்ள இன எழுத்துச் சொற்களை வட்டமிட்டுத் தனியாக எடுத்து எழுதுக.

ண்

ம்

தி

ந்

கி

கி

ன்

ம்

து

ளி

ங்

தெ

பி

ல்

ங்

கு

ள்

வி

ஞ்

ள்

மண்டபம்

சங்கு

பந்து

மஞ்சள்

ஈ) கலைச் சொல் அறிவோம்

கல்வி - Education


தொடக்கப் பள்ளி - Primary School

மேல்நிலைப் பள்ளி - Higher Secondary School

நூலகம் - Library

மின்படிக்கட்டு - Escalator

மின்தூக்கி - Lift

மின்னஞ்சல் - E - Mail

குறுந்தகடு - Compact Disk (CD)

மின்நூலகம் - E – Library

மின்நூல் - E - Book

மின் இதழ்கள் - E – Magazine

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com 

ஆறாம் வகுப்பு - இரண்டாம் பருவம்

தமிழ்

இயல் - 1

வினா - விடைகளை PDF வடிவில் பதிவிறக்க

இங்கே சொடுக்கவும் 

CLICK HERE TO GET PDF THIS FILE 

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post