6TH - TAMIL - 2ND TERM -UNIT 1 - MOODURAI

 

ஆறாம் வகுப்பு - தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - விடைகள்

மூதுரை

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 2                                                                 இயல் : 1

கண்ணெனத் தகும்                                                                 மூதுரை

மனப்பாடப்பாடல்


 அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. மாணவர்கள் நூல்களை -------- கற்க வேண்டும்.

அ) மேலோட்டமாக          

         ஆ) மாசுற          

         இ) மாசற     

         ஈ) மயக்கமுற

2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

அ) இடம் + மெல்லாம்

         ஆ) இடம் + எல்லாம்

         இ) இட + எல்லாம்

     ஈ) இட + மெல்லாம்

3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

அ) மாச + அற      

ஆ) மாசு + அற      

இ) மாச + உற    

ஈ) மாசு + உற

4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

அ) குற்றமில்லாதவர்      

ஆ) குற்றம்இல்லாதவர்      

இ) குற்றமல்லாதவர்

ஈ) குற்றம்அல்லாதவர் 

 5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

 அ) சிறப்புஉடையார் 

ஆ) சிறப்புடையார்   

இ) சிறப்படையார்    

 ஈ) சிறப்பிடையார் 

ஆ ) குறுவினா                                                              .         

1. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

மன்னனைக் காட்டிலும் கல்வி கற்றவர் சிறப்புடையவர். கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு .

இ ) சிந்தனை வினா 

1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.

·         மற்றவர்களை நம்பி வாழ வேண்டும்.

·         சமூகத்தில் மதிப்பு இருக்காது.

·         கல்லாதவரை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்

2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

·           கல்வி மனிதனை உயர்த்துகிறது.

·           சமூகத்தில் மதிப்பு உயர்கிறது.

·           கல்வியின் மூலம் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

·           அறியாமை அகல்கிறது.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post