10TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 4TH WEEK

 

நாள்               :           25-10-2022 முதல் 28-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :               நான்காம் வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. புறப்பொருள் இலக்கணம்

                                        2. சங்க இலக்கியத்தில் அறம்

                                         3. ஞானம்

அறிமுகம்                 :

Ø  அகப்பொருள் பற்றிய பாடப்பகுதியிலிருந்து சில வினாக்களைக் கேட்டு பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்

Ø  நீ யார்க்கேனும் உதவி செய்தது உண்டா? உனக்கு பிறர் ஏதேனும் உதவி செய்துள்ளார்களா?

Ø  உனது வீட்டில் வீட்டு வேலைகள் செய்வோர் யார்? நீ எந்த மாதிரி உதவியினை உனது அம்மா அப்பாவிற்கு செய்வாய்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன் பெறுதல்

Ø  அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப் பொருளறிதல்

Ø  தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதனைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  பொருள் இலக்கணம் பற்றி விளக்குதல்.

Ø  அகப்பொருள் இலக்கணத்தை நினைவூட்டல்.

Ø  ஒவ்வொரு திணையின் செயல்பாடுகலையும், காணொலி வழியே காட்டுதல்.

Ø  ஒவ்வொரு திணையின் செயல்பாடுகளை விளக்குதல்

Ø  எதிர் எதிர் திணைகளை விளக்குதல்

Ø  திணைக்குரிய பூக்களை காட்டி விளக்குதல்.

Ø  அறம் பற்றி கூறல்

Ø  அறத்தில் வணிக நோக்கம் இல்லாமையை விளக்குதல்

Ø  அரசியம் அறம், போர் அறம், கொடை, உதவி,வாய்மை பற்றி கூறல்

கருத்து  வரைபடம்                   :

புறப்பொருள் இலக்கணம்





சங்க இலக்கியத்தில் அறம்



ஞானம்

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

புறப்பொருள் இலக்கணம்

o    வெட்சி – ஆநிரை கவர்தல்

o    கரந்தை – ஆநிரை மீட்டல்

o    வஞ்சி – மண்ணாசை காரணமாக போரிடல்

o    காஞ்சி – எதிர்த்து போரிடல்

o    நொச்சி – மதில் காத்தல்

o    உழிஞை – மதிலை கைப்பற்றுதல்

o    தும்பை     - வலிமை நிலைநாட்ட போரிடல்

o    வாகை     - வெற்றிப் பெற்ற மன்னனைப் பாடுதல்

o    பாடாண் – பாடு + ஆண் + திணை = பாடுவதற்கு தகுதி உடைய ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது

o    பொதுவியல் – வெட்சி முதல் பாடாண் வரை உள்ளவற்றில் சொல்லப்படாதவை மற்றும் பொதுவான தகவல்கள்

o    கைக்கிளை              -             ஒரு தலைக்காமம்

o    பெருந்திணை           -             பொருந்தா காமம்

சங்க இலக்கியத்தில் அறம்

o    கவிதை வாழ்க்கையின் திறனாய்வு – ஆர்னால்டு

o    அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது சங்க கால மக்களின் கருத்து

o    அரசியல் அறம் : அரசனின் நிர்வாகம், கடமை, வெண் கொற்றக்குடை

o    அறங்கூறவையம் : அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைப்புரிந்தன.

o    போர் அறம் : தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் புரியக் கூடாது.

o    கொடை : வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது.

o    உதவி : பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

o    வாய்மை : வாய்மைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

ஞானம்

o    தி.சொ.வேணுகோபாலன்

o    ஊர் : திருவையாறு

o    பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரி பேராசிரியர்

o    வீட்டில் அறப்பணி

o    வீட்டைத் துடைத்தல்

o    சாயம் அடித்தல்

 

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

புறப்பொருள் இலக்கணம்


சங்க இலக்கியத்தில் அறம்


ஞானம்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  திணைகளின் விளக்கம் தெளிதல்

Ø  எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்தி அறிதல்

Ø  திணைக்களுக்கு உரிய பூக்களையும் அதன் செயல்பாடுகளையும் அறிதல்

Ø  அறங்களின் தன்மைப் பற்றி அறிதல்

Ø  சங்க கால மக்கள் அறத்தோடு வாழ்ந்த நிகழ்வை அறிதல்

Ø  அறத்தை இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்

Ø  வீட்டில் அறப்பணி செய்யும் செயலை அறிதல்

Ø  வீட்டினைச் சுத்தம் செய்யும் பணி எனபது இடையறாது நடக்கும் நிகழ்வு என்பதனை அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  புறப்பொருள் என்பது யாது?

Ø  அறம் எனபது யாது?

Ø  ஞானம் கவிதையை எழுதியவர் யார்?

MOT

Ø  பாடாண் திணைப் பற்றிக் கூறுக

Ø  போர் அறம் குறித்து கூறுக.

Ø  உங்கள் வீட்டில் நீ செய்யும் பணிகள் யாவை?

HOT

Ø  புறத்திணைகளில் நடைபெற்ற போரும் , இன்றைய நிலையில் நடைபெற்ற போரும் குறித்து கூறுக

Ø  அறங்கள் இன்று எந்த நிலையில் உள்ளது என்பதனைப் பற்றிக் கூறுக.

Ø  ஞானம் கவிதையினை அறத்துப்பாலுடன் ஒப்பிடுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச் செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய போர்முறைகளைத் தெரிந்து கொள்ளுதல்

Ø  அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப் பொருளறிதல்,உரை நிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்

Ø  குறிப்புப் பொருள் உணர்த்தும் புதுக்கவிதை இயல்பறிந்து படித்தல், மையக்கருத்துணர்தல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post