8TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 3RD WEEK

 

நாள்                :           19- 09-2022 முதல்  23 - 09-2022       

மாதம்                :           செப்டம்பர்

வாரம்               :             மூன்றாம் வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. திருப்புதல் இயல் 1 முதல் 4 வரை

பொது நோக்கம்       :

Ø  இயல் – 1 முதல் 4 இல் உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை முதல் பருவத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  காலாண்டு தேர்வுக்குரிய பாடப்பகுதிகளில் திருப்புதல் மேற்கொள்ளல்.

Ø  அனைத்து இயல்களில் உள்ள செய்யுள் பகுதிகளில் எதுகை, மோனை, இயைபு நயங்களை காணுதல்

Ø  தமிழ்மொழி வாழ்த்து, ஓடை, னோயும் மருந்தும், கல்வி அழகே அழகு, திருக்குறள் போன்ற மனப்பாடப்பகுதிகளில் போதிய பயிற்சி வழங்கி மனனம் செய்தல்.

Ø  சில முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்குதல்

o    தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?

o    பாரதியார் தமிழை வண்மொழி என அழைக்கக் காரணம் என்ன?

o    செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக் கூடாது?

o    தமிழில் ஏற்பட்ட உருவ மாற்றகளை எழுதுக.

o    தற்கால தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகளாக கருதுவன யாவை?

o    எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

o    ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

o    புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

o    நீர் நிலைகள் குறித்து சியாட்டல் கூறியுள்ளவற்றைத் தொகுத்து எழுதுக.

o    ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

o    விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனைப் பாராட்டி கடிதம் எழுதுக.

o    சான்றோருக்கு அழகாவது எது?

o    நோயின் மூன்று வகைகள் யாவை?

o    நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

o    பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

o    வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

o    நீதிநெறி விளக்கம் கூறும் பாடல் கருத்தினை விளக்கி எழுதுக.

o    பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?

o    காப்பியக் கல்விக் குறித்து திரு.வி.க. கூறும் செய்திகளை தொகுத்து எழுதுக.

o    உடனிகழ்ச்சி பொருள் என்றால் என்ன?

o    நூலகம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

Ø  இவை போன்ற சில தேர்வுக்குரிய முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்குதல்


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post