8TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 2ND WEEK

  

நாள்               :           10-10-2022 முதல் 14-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. திருகேதாரம்

                                        2. பாடறிந்து ஒழுகுதல்

                                        3. நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

அறிமுகம்                 :

Ø  உங்களின் மனம் கவர்ந்த  முதல் நான்கு இயல்களில் உள்ள பாடப்புத்தகத்தில் பாடல் எது?

Ø  நீங்கள் விரும்பும் இசைக் கருவி எது?

Ø  உங்கள் வீட்டில் உள்ள கைவினைப் பொருட்கள் பற்றிக் கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø  சங்க காலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்

Ø  கைவினைக் கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  செய்யுள் பகுதிகளின் ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø  புதியச் சொற்களுக்கான பொருள் கூறல்

Ø  செய்யுளின் பொருள் விளக்கம் கூறல்

Ø  செய்யுளின் பொருளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø  இசைக்கருவிகள் பற்றி கூறல்

Ø  இசைக்கருவிகளின் வகைகளைப் பற்றி விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

திருக்கேதாரம்







பாடறிந்து ஒழுகுதல்

நாட்டுப்புற கைவினைக் கலைகள்

  

விளக்கம்  :

( தொகுத்தல் )

திருக்கேதாரம்

Ø  ஆசிரியர் குறிப்பு :

o    பெயர் : சுந்தரர்

o    தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்

o    புல்லாங்குழலும்,முழவும் இணைந்து ஒலிக்கும்

o    நீர் நிலைகள் வைரங்களைப் போல வாரி இறைக்கும்.

o    மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும்

o    கிண் என்னும் ஒலியானது இசையாக முழங்கும்

 

              பாடறிந்து ஒழுகுதல்

Ø  ஆசிரியர் : நல்லந்துவனார்

இல்வாழ்வு

வறியவர்களுக்கு உதவுதல்

போற்றுதல்

அன்புடையோரை பிரியாது வாழ்தல்

பண்பு

சான்றோர் வழியில் நடத்தல்

அன்பு

வெறுப்பின்றி வாழ்தல்

அறிவு

பொறுத்து இருத்தல்

செறிவு

வாக்கினை காப்பாற்றுதல்

நிறை

பிறர் அறியாமல் காத்தல்

முறை

குற்றத்திற்கு உரிய தண்டனை வழங்குதல்

பொறை

பண்பு நலன்களை பின்பற்றுதல்

 

நாட்டுப்புற கைவினைக் கலைகள்

·         பானை வனைதல்

·         மண்பாண்ட கலையின் வளர்ச்சி சுடுமண் சிற்பங்கள்

·         மூங்கில் கலை : மட்டக் கூடை, தட்டுக்கூடை, கொட்டுக் கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,கூரைத்தட்டி

·         பாய் : தடுக்குப்பாய், பந்திப்பாய்,திண்ணைப்பாய்,பட்டுப்பாய்,தொழுகைப்பாய்

·         பனையோலை – கிலுகிலுப்பை, சிறிய கொட்டான், பெரியக் கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய்

·         பிரம்பு : கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத் தட்டு, வெற்றிலைப் பெட்டி.

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

திருக்கேதாரம் : 

பாடறிந்து ஒழுகுதல் : 


நாட்டுப்புற கைவினைக் கலைகள் : 



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  சங்க கால இலக்கியம் பற்றி அறிதல்

Ø  செய்யுளினை சீர்பிரித்து அறிதல்

Ø  புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

Ø  செய்யுளின் பொருளை அன்றாட வாழ்வில் பின்பற்றுதல்

Ø  கைவினைக் கலைகளைப் பற்றி அறிதல்

Ø  கைவினைப் பொருட்களின் பயன்பாடு அறிதல்

Ø  கைவினைப் பொருட்களை பாதுகாத்தல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  திருகேதாரம் பாடலை இயற்றியவர் யார்?

Ø  கலித்தொகை ______ நூல்களில் ஒன்று

Ø  பானை செய்தலை ______ என்று சொல்வது மரபு

MOT

Ø  தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாக சுந்தரர் கூறுவன யாவை?

Ø  பண்பு,அன்பு ஆகியவை என்பவற்றுக்குக் கவித்தொகை குஊரும் விளக்கம் யாது?

Ø  எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?

HOT

Ø  விழாக்களின் போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

Ø  வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

Ø  கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைபோது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

Ø  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

Ø  எதையும் படித்து முடித்த பின்னர் தமக்கு தெரியாத சூழல்கள்/ நிகழ்வுகள் பற்றி கற்பனை செய்து  புதிய மனபிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக

Ø   நற்பண்புகலின் பெயர்களை பட்டியலிட்டு எழுதி வருக,

Ø   கைவினை பொருள் ஒன்றினை செய்து வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post