10TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 1ST WEEK

 

நாள்                 :           05 -09 -2022 முதல்  09 -09  -2022        

மாதம்                         செப்டம்பர்       

வாரம்               :          முதல்   வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                     1. நிகழ்கலை

                                                       2. பூத்தொடுத்தல்

                                                       3. முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்

அறிமுகம்                 :

Ø  உங்கள் ஊர் திருவிழாக்களில்  நடைபெறக் கூடிய  கலைகள் குறித்து கூறுக

Ø  நீங்கள் அறிந்த பூக்களின் பெயர்களைக் கூறுக.

Ø  உனது வீட்டின் அருகில் குழந்தைகள் உள்ளனரா? அவர்களின்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து,அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் தங்களின் பங்களிப்பை நல்குதல்.

Ø  எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.

Ø  கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்வுகள் பற்றிக் கூறல்

Ø  கரகாட்டம், மயிலாட்டம் பற்றிக் கூறல்

Ø  காவடியாட்டம், ஒயிலாட்டம் பற்றியக் காணொளிகளை காட்டி விளக்குதல்

Ø  தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் பற்றிக் கூறல்

Ø  தப்பு ஆட்டம், புலி ஆட்டம், தெருக் கூத்து, தோற்பாவைப் பற்றிக் கூறல்

Ø  பூவின் மென்மையை பெண்களோடு ஒப்பிடப்பட்டுள்ளதைக் கூறல்

Ø   பூக்க்கட்டும் கலையினை பற்றிக் கூறல்

Ø  முருகனை குழந்தையாக பாவித்து எழுதப்பட்டுள்ள பாடலை விளக்குதல்

Ø  செய்யுளின் பொருளைக் கூறல்

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்                   :

நிகழ்கலை







பூத்தொடுத்தல்

முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

நிகழ்கலை

Ø  பழந்தமிழ் மக்களின் கலை, புதுமை, அழகியல் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் ஆகியவற்றின் எச்சங்களை அறிய கலைகள் துணை செய்கின்றன.

Ø  கரகாட்டம் : தலையில் கரகம் வைத்து ஆடுவது

Ø  மயிலாட்டம் : கரகாட்டத்தின் துணை ஆட்டம்

Ø  காவடியாட்டம் : இரு முனைகளிலும் பாரம் தாங்கி ஆடும் ஆட்டம்

Ø  ஒயிலாட்டம் : கம்பீரத்துடன் ஆடுவது தனி சிறப்பு

Ø  தேவராட்டம், சேவையாட்டம் : வானத்து தேவர்களால் ஆடப்படுவது

Ø  பொய்க்கால் குதிரையாட்டம் : போலச் செய்தல் என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டது.

Ø  தப்பு ஆட்டம் : தப்பு என்னும் இசைக் கருவிக் கொண்டு ஆடுவது

Ø  புலி ஆட்டம் : தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது

Ø  தெருக் கூத்து : நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை.

Ø  தோற்பாவைக் கூத்து : தோலால் செய்யப்பட்ட பொம்மைக்களைக் கொண்டு ஆடுவது

பூத்தொடுத்தல்

Ø  கவிஞர் : உமா மகேஸ்வரி

o   ஊர் : மதுரை

o   கவிதைகள் : நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை

Ø  பூத்தொடுக்கும் அழகினை அழகாக விவரிக்கிறார்.

Ø  பெண் அந்த பூவினை எப்படி கட்டுவது என்பதனை கவிதை வடிவமாக தந்துள்ளார் கவிஞர்.

முத்துக் குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

Ø  குமரகுருபரர்

Ø  17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.

Ø  முருகனை குழந்தையாக பாவித்து பாடப் பெற்றது.

Ø  பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று

Ø  ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகை உண்டு.

Ø  அணிகலன் : சிலம்பு, கிண்கிணி, அரை நாண், சுட்டி, குண்டலம், குழை, சூழி

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

நிகழ்கலை - பகுதி 1


பூத்தொடுத்தல்


முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்




·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  நிகழ்கலைகளின் வடிவங்களை உணர்தல்

Ø  நிகழ்கலைகள் தற்பொழுது எவை ஆடப்படுகிறது என்பதனை உணர்தல்.

Ø  நிகழ்கலைகளுக்கு இசைக்கப்படும் கருவிகளை அறிதல்

Ø  எளிய சொற்களைக் கொண்டு கவிதைப் படைக்கும் இயல்பை பூத்தொடுத்தல் பகுதியில் உணர்தல்

Ø  பூவின் மென்மையை பெண்மையோடு ஒப்பிடப்படுவதை உணர்தல்

Ø  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் – நூல் வெளி அறிதல்

Ø  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழில் முருகன் குழந்தையாக பாவிக்கப்பட்டதை அறிதல்

Ø  முத்துக் குமாரசாமி பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  பழந்தமிழர் எச்சங்களை எவ்வாறு அறியலாம்?

Ø  பூத்தொடுத்தல் கவிதையை இயற்றியவர் யார்?

Ø  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை இயற்றியவர் யார்?

MOT

Ø  கரகாட்டம் குறித்து கூறுக

Ø  பூத்தொடுத்தல் கவிதையின் கருபொருள் யாது?

Ø  செங்கீரைப் பருவம் என்பது யாது?

HOT

Ø  நிகழ்கலைகளை வளர்த்தெடுக்க நீங்கள் செய்வன யாவை?

Ø  பூத்தொடுத்தல் போன்று பெண்கள் செய்யும் இதர பணிகள் சிலவற்றைக் கூறுக.

Ø  ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் குறித்துக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  தமிழர் தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் மொழிவழியாகத் தங்களின் பங்களிப்பைத் தருதல்.

Ø  எளிய சொற்களும், கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து கவிதை படித்தல், படைத்தல்.

Ø  கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற மொழிநடையைச் சிற்றிலக்கியம் வாயிலாகப் படித்தறிந்து சந்த நயத்தினைப் பிரித்துணர்ந்து சுவைத்தல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post