10TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 2ND -WEEK

 

நாள்                 :           12 -09 -2022 முதல்  16-09  -2022        

மாதம்                         செப்டம்பர்       

வாரம்               :             இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                     1. கம்பராமாயணம்

                                                       2. பாய்ச்சல்

                                                       3. அகப்பொருள் இலக்கணம்

அறிமுகம்                

Ø  மாணவர்கள் சென்று வந்த சுற்றுலாக்கள் பற்றிய தகவல்களை கூற வைத்தல்

Ø  ஊர் திருவிழாக்களில் நடைபெறும் சில கலைகளை பற்றி கேட்டல்

Ø  நாம் வாழ எவை எவை நமக்குத் தேவை ?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்

Ø  கதைகளைப் படித்து மையக் கருத்துணர்தல். கதை குறித்து கலந்துரையாடல்

Ø  தமிழர் தம் அக வாழ்வினை இலக்கணம் வழியாக அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  கம்பரைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் கூறல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் பொருள் விளக்கம் கூறல்

Ø  செய்யுளினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  செய்யுள் வழியாக அன்றாட வாழ்வில் கலைகளை போற்றுதல்

Ø   கதையினை உணர்ந்து படித்தல்

Ø  கதையின் வழியாக் கூறப்பட்டுள்ள கலையின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்

Ø  பொருள் இலக்கணம் சிறப்புப் பற்றிக் கூறல்

Ø  அகப்பொருள் இலக்கணம் பற்றி விளக்குதல்

Ø  முதற் பொருள், கரு பொருள் பற்றி கூறல்

கருத்து  வரைபடம்                   :

கம்பராமாயணம்



பாய்ச்சல்

அகப்பொருள் இலக்கணம்

 

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

கம்பராமாயணம்

Ø  ஆசிரியர் : கம்பர்

o   முதலில் இட்ட பெயர் இராமாவதாரம்

o   ஆறு காண்டங்களை உடையது

o   கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்,

o   கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சேர்ந்தவர்.

o   பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்

o   அயோத்தியா காண்டம்  - கங்கைப் படலம், கங்கை காண் படலம்

o   யுத்த காண்டம் – கும்பருணன் வதைப் படலம்

பாய்ச்சல்

Ø  ஆசிரியர் - கந்தசாமி

Ø  ஊர் : நாகப்பட்டிணம், மயிலாடுதுறை

Ø  நூல்கள் : தக்கையின் மீது நான்கு கண்கள், விசாரணை கமிஷன்,தொலைந்து போனவர்கள், சூரியவம்சம், சாந்தகுமாரி

Ø  கலைஞனின் வாழ்வினைப் படம் பிடித்துக் கூறுகிறது பாய்ச்சல்.

Ø  அனுமார் வேடமிட்டவரின் ஒப்பனைகளை கூறுகிறது

அகப்பொருள் இலக்கணம்

Ø  பொருள் : ஒழுக்கமுறை

Ø  அகப்பொருள் : அன்புடைய தலைவன், தலைவி இடையிலான உறவு நிலை அகத்திணை

Ø  முதற்பொருள் : நிலமும், பொழுதும்

Ø  நிலம் : குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல்,பாலை

Ø  பொழுது : பெரும் பொழுது, சிறு பொழுது

Ø  பெரும்பொழுது : ஆண்டின் ஆறு கூறுகள்

Ø  சிறுபொழுது : நாளின் ஆறு கூறுகள்

Ø  கருபொருள் : தெய்வம், மக்கள், தொழில், பூ, விலங்கு, பறை,பண் …..

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

கம்பராமாயணம் 


இனிய இராகத்தில் கேட்க

தண்டலை மயில்களாட



வெய்யோன் ஒளி


பாய்ச்சல்


அகப்பொருள் இலக்கணம்




·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  செய்யுளின் பொருள் உணர்தல்

Ø  நிகழ்கலை கலைஞரின் கலையை உணர்தல்

Ø  கலையைப் போற்றுதல்

Ø  பொருள் என்பது குறித்து அறிதல்

Ø  அன்பின் ஐந்திணை என்பதனை அறிதல்

Ø  முதற்பொருளின் நிலமும், பொழுதும் அறிதல்

Ø  அகப்பொருளின் கருபொருள்களை உணர்தல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  கம்பராமாயணம் இயற்றியவர் யார்?

Ø  பாய்ச்சல் கதையில் வரும் கலை எது?

Ø  பொருள் என்பது _________ஐ குறிக்கும்.

MOT

Ø  சரயு ஆறின் தன்மைகளாக கம்பர கூறுவது யாது?

Ø  பாய்ச்சல் கதையின் கருபொருள் யாது?

Ø  முதற்பொருள் என்பது யாது?

HOT

Ø  குகன் குறித்து நீ அறிந்த தகவல்களைக் கூறுக.

Ø  பகல் வேடக் கலைஞர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்து நீ கூறுக.

Ø  ஓராண்டின் ஆறு கூறுகள் யாவை?

கற்றல் விளைவுகள்                  :

Ø  அழகியலும் கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப் படித்தல், அதனுள் பொதிந்துள்ள பொருள்,சொல்,ஓசை நயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும் ஆர்வம் பெறல்.

Ø  கதையைப் படித்து மையக் கருத்துணர்தல். கதைக் குறித்து கலந்துரையாடுதல்

Ø  தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின் வாயிலாக, இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கைமுறையைப் புரிந்து கொள்ளுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post