10TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 2ND WEEK

  

நாள்               :           10-10-2022 முதல் 14-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. சிற்றகல் ஒளி

                                        2. ஏர் புதிதா

                                        3. மெய்க்கீர்த்தி

அறிமுகம்                 :

Ø  சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.

Ø  உழவுத் தொழிலின் அவசியம் குறித்து கேட்டல்

Ø  பள்ளியின் கல்வெட்டுகள் மூலம் காணப்படும் தகவல்களை ஒரு மாணவர் அறிந்து அதை வகுப்பில் கூற வைத்து படப்பொருளை அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து, அது போல எழுத முற்படுதல்

Ø  உழவின் அவசியம் குறித்து உணர்தல்

Ø  காப்பியம், மெய்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.

Ø  மா.பொ.சி.யின் போராட்டங்கள் பற்றி கூறுதல்.

Ø  மா.பொ.சியின் வடக்கெல்லை,தெற்கெல்லைப் போராட்டங்கள் பற்றிக் கூறுதல்

Ø  மார்ஷ்ல் நேசமணி பற்றி அறிதல்

Ø  உழவின் அவசியம் குறித்து இலக்கியங்கள் மூலம் உணர்த்துதல்

Ø  உழவுத் தொழில் பற்றிய சிறப்பினை அறிந்து போற்றுதல்.

Ø  மெய்க்கீர்த்தி விளக்கம் அளித்தல்

Ø  கல் இலக்கியம் என்பதன் பொருள் கூறல். அது எவ்வாறு எழுதப்படுகிறது? எனவும் விளக்குதல்

Ø  இரண்டாம் இராசராச சோழன் சிறப்புகள் மற்றும் பட்டங்கள் பற்றி விளக்குதல்.

Ø  மெய்க்கீர்த்தி பாடல் அடிகளை சீர் பிரித்து வாசித்தல்

Ø  பொருள் புரியா சொற்களுக்கு பொருள் கூறல்.

Ø  பாடல் வழியே கூறப்பட்டுள்ள ராசராச சோழன் நாட்டு வளம் மற்றும் ஆட்சி சிறப்பு பற்றி விளக்குதல்

Ø  அவற்றை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்.

கருத்து  வரைபடம்                   :

சிற்றகல் ஒளி





ஏர் புதிதா?

மெய்க்கீர்த்தி

 

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

சிற்றல்கல் ஒளி

Ø  மா.பொ.சி. யின் இளமை காலம்

Ø  வறுமையால் இழந்த கல்வி

Ø  மா.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன்

Ø  மா.பொ.சி.யின் பேராயக்கட்சியில் பங்கு

Ø  மா.பொ.சி. சென்னையை மீட்ட நிகழ்வு

Ø  வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்

Ø  மா.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு

ஏர் புதிதா

Ø  ஆசிரியர் : கு.ப.ராஜகோபாலன்

o   ஊர் : கும்பகோணம்

o   படைப்புகள் : அகலிகை, ஆத்ம சிந்தனை

Ø  பொன் ஏர் பூட்டும் நிகழ்வினை கவிதை வழி அறிதல்

Ø  வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம்

மெய்க்கீர்த்தி

Ø  மெய்க்கீர்த்தி

o    இரண்டாம் இராச ராச சோழன் – சிறப்பு

o    இரண்டாம் இராச ராச சோழன் பெற்ற பட்டங்கள்

o    மெய்க்கீர்த்தி பாடப்பகுதி : 1. நாட்டின் வளம்            2. ஆட்சி சிறப்பு

o    கல்வெட்டில் மன்னரை புகழ்வது

o    புலவர்களால் எழுதப்பட்டு அது கல் தச்சர்களால் எழுதப்படும் இலக்க்கிகியம் கல் இலக்கியம்

Ø  சொற் பொருள் :

o    மனுவாணை            –             ஆட்சி

o    பிணித்தல்                -             கட்டுதல்

o    அரற்றுதல்                -             புலம்புதல்

o    வடு                          -             காயம்

o    மருள்                        -             பயம்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

சிற்றகல் ஒளி


ஏர் புதிதா


மெய்க்கீர்த்தி



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  தன் வரலாறு உரைநடை பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  உரைநடையை பிழையின்றி படித்தல்

Ø  உரைநடையில் காணும் புதிய சொற்களை அடையாளம் காணுதல்.

Ø  மா.பொ.சி. யின் போராட்டங்களை மதித்தல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய சொற்களுக்கு பொருள் காணுதல்

Ø  உழவின் மேன்மை அறிதல்

Ø  பொன் ஏர் பூட்டும் நிகழ்வினை கவிதை வடிவில் காணுதல்

Ø  இராசராச சோழன் பற்றி அறிதல்

Ø  கல் இலக்கியம் பற்றி அறிதல்

Ø  இராச இராச சோழன் ஆட்சி சிறப்பு பற்றியும், அவன் நாட்டின் வளங்களையும் பற்றி அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  ம.பொ.சியின் இளமை காலம் குறித்து கூறுக

Ø  ஏர் புதிதா என்ற கவிதை யாருடையது?

Ø  மெய்க்கீர்த்தி என்பது யாது?

MOT

Ø  மார்ஷல் நேசமணி பற்றி கூறு

Ø  பொன் ஏர் பூட்டுதல் என்பது யாது?

Ø  இரண்டாம் இராச இராச சோழன் பெற்ற பட்டங்கள் யாவை?

HOT

Ø  நீங்கள் படித்து சுவைத்த வரலாற்று கதைகள் பற்றி கூறுக.

Ø  முதல் மழை விழுந்தது – தொடர்ந்து நிகழும் உழவுச் செயல்களை ஏர்புதிதா  கவிதைக் கொண்டு வரிசைப்படுத்துக.

Ø  இன்றைய நிலையில் கல்வெட்டுக்குறித்து  கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அது போல எழுத முற்படுதல்

Ø  கவிதையின் மையக்கருத்தறிதல், கவிதையில் சொற்களும் தொடர்களும் பயன்படுத்தப்பட்டுள்ள முறையறிந்து புதுக்கவிதை படித்தல், படைத்தல்

Ø  வேந்தர்களின் சிறப்புணர்த்தும் கல்வெட்டு இலக்கியமான மெய்க்கீர்த்தியின் தனித்தன்மை உணர்ந்து படித்தல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

  

                                        2. துன்பம் வெல்லும் கல்வி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post