7TH -TAMIL - NOTES OF LESSON - JUNE 4TH WEEK

 நாள்                :           27-06-2022 முதல்  01-07-2022        

மாதம்                :           ஜூன்

வாரம்               :           ஜூன் – நான்காம்   வாரம்                      

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. எங்கள் தமிழ்

                                                 2. ஒன்றல்ல இரண்டல்ல   

 

கருபொருள்                              :

Ø   செய்யுளைப் படித்து மையக் கருத்தை எடுத்துரைத்தல்

Ø  பழந்தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறிதல்

உட்பொருள்                              :

Ø  நாமக்கல் கவிஞர் பற்றி அறிதல்

Ø  வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் உணர்த்தும் தமிழ்மொழியை அறிதல்

Ø  உடுமலை நாராயண கவி பற்றி அறிதல்

Ø  வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறம் பற்றியும் அறிதல்

Ø  சரளமாக வாசிக்க வைத்தல்

கற்றல் மாதிரிகள்                     :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி

கற்றல் விளைவுகள்                  :

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களை பட்டியலிடுதல்

Ø  தமிழுக்கு கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளை திரட்டுதல்

ஆர்வமூட்டல்                             :

Ø  மாணவர்கள் முன் வகுப்பில் கற்ற தமிழ் பாடலைப் பாடுதல்

Ø  நீ செய்த உதவியும் நீ பிறருக்கு செய்த உதவியும் குறித்து கூறுக.

படித்தல்                                    :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளில் இடம் பெற்ற புதியச் சொற்களை அடிகோடிடல்.

Ø  புதியச் சொற்களுக்கான பொருளை அகராதி  கொண்டு அறிதல்

Ø  செய்யுளின் நயங்களை அறிதல்

Ø  மனப்பாடப்பகுதி செய்யுளை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு வாசித்தல்

நினைவு வரைபடம்                   :

                                                                                                       எங்கள் தமிழ்



ஒன்றல்ல இரண்டல்ல

 

தொகுத்து வழங்குதல்              :

 

                                    எங்கள் தமிழ்

Ø  நம் தாய் மொழி தமிழ்,அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தரும்.

Ø  பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார், தம்மைப் போற்றாதவரையும் இகழமாட்டார் தமிழ் பயின்றோர்

Ø  கொல்லாமை குறிக்கோள், பொய்யாமை கொள்கையாக கொண்டு வாழ அன்பும் அறமும் உதவும்.

Ø  தமிழ்மொழி தேன் போன்ற மொழி

Ø  ஆசிரியர் குறிப்பு :

பெயர் : வெ.இராமலிங்கனார்

சிறப்பு பெயர் : நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர்

பண்புகள் : தமிழறிஞர்,கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்

எழுதிய நூல்கள் : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை, சங்கொலி

                        ஒன்றல்ல இரண்டல்ல

                        ஆசிரியர் குறிப்பு

பெயர் : உடுமலை நாராயண கவி

சிறப்பு பெயர் : பகுத்தறிவு கவிராயர்

பண்புகள் : தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்

 

Ø  தமிழ் மொழியின் பெருமைகள் ஒன்றல்ல இரண்டல்ல பல.

Ø  தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றல்ல இரண்டல்ல

Ø  பகைவரை வென்றதை பாடுவது பரணி

Ø  இசைபாடாலான நூல்கள் பரிபாடல், கலம்பகம், எட்டுத்தொகை

Ø  அகம் புறம் என சங்க இலக்கியங்கள்

Ø  முல்லைக்குத் தேர் தந்து புகழ் பெற்றான் பாரி,

Ø  புலவரின் சொல்லுக்கு தன் தலையை தந்தான் குமணன்.

Ø  வள்ளல்களின் வரலாறு ஒன்றல்ல இரண்டல்ல பலவாகும்

வலுவூட்டல்                  :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் காணொளியைக் காண்பித்து வலுவூட்டல்.

 

மதிப்பீடு                                   :

                                                எளிய வினாக்கள் :

Ø  நெறி என்னும் சொல்லின் பொருள்_______

Ø  காந்திய கவிஞர் என வழங்கப்படுபவர்________

Ø  பகைவரை வெற்றிக் கொண்டவரை பாடும் இலக்கியம்_________

Ø  வானில்______ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

நடுநிலை வினாக்கள்:

Ø  அன்பும் அறமும் எதற்கு உதவுகிறது?

Ø  தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

Ø  பாடலில் உள்ள எதுகை நயங்களை எழுதுக.

Ø  பாடலில் மோனை நயங்களை எழுதுக.

சிந்தனை வினா :

Ø  கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்ப்பிடுகிறார்?

Ø  தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

குறைதீர் கற்றல்                        :

Ø   மதிப்பீட்டு வினாக்களைக் கொண்டு பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

எழுத்துப் பயிற்சி                      :

Ø   பாடநூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதுதல்

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   செய்யுளை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø   செய்யுளின் நயங்களை அறிதல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களை வாசித்தல்

Ø   மனப்பாடப்பகுதியினை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்

தொடர் பணி                            :

Ø  தமிழை நீங்கள் எதனோடு ஒப்பிடுவீர்கள் என்பது குறித்து எழுதி வருக.

Ø  தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் பெயர்களை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

                                                

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post