6TH - TERM-1-UNIT1-INBA TAMIL - WORKSHEET - PDF

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது கல்விவிதைகள் வலைதளமானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான கற்றல் வளங்களை வழங்கிவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மாணவர்களின் கற்றலுக்கு என்னத் தேவைப்படும் என்பதனை அறிந்து அதனை வழங்கவே தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள் உள்ளன என்பதனை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இப்போது நமது கல்வி விதைகள் வலைதளத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான கற்றல்வளங்களை உருவாக்கி வழங்க உள்ளோம். ஆசிரியர்கள் அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஆசிரியர்களுக்கு இன்னப் பிற தேவைகள் எனில் அதனை தெரியப்படுத்தினால் அதனை தயார் செய்து வழங்கவும் நமது வலைதளம் தயாராக உள்ளது. எனவே ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக என்னத் தேவையோ அதனை தயார் செய்து வழங்கிவிடலாம். இப்போது ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் பருவம் 1  இல் இயல்1 இல் உள்ள இன்பத்தமிழ் பாடத்திற்கான பணித்தாள் உருவாக்கி உள்ளோம். ஆசிரியர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.  

ஆறாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள்

பருவம் : 1                                                                 இயல் : 1

பாடம் : இன்பத்தமிழ்                                 மதிப்பெண்கள் : 25

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                          5×1=5

1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்

அ) சமூகம்       ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி      ஆ) கோபம்      இ) வருத்தம்    ஈ) அசதி

 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) நிலயென்று ஆ) நிலவென்று          இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள்         இ) தமிழுங்கள்  ஈ) தமிழ்எங்கள்

 5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------

அ) அமுது + தென்று     ஆ) அமுது + என்று  இ) அமுது + ஒன்று       

ஈ) அமு + தென்று

 6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர்           இ) செமை + பயிர்      

ஈ) செம்பு + பயிர்

ஆ) இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.           4×1=4

 1. விளைவுக்கு – பால்

 2. அறிவுக்கு - வேல்

3. இளமைக்கு - நீர்

4. புலவர்க்கு - தோள்

இ) ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.      2×1=2

(எ.கா.) பேர் - நேர்

ஈ) குறுவினா                                                            .                                             2×1=2

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை? 2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

உ) சிறுவினா                                                                .                                        3×2=6

 1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

 ஊ) சிந்தனை வினா                                                                                           6×1=6

 வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது ?

 

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

பணித்தாள் - PDF பெற


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post