6TH - TAMIL - NOTES OF LESSON - APRIL -2ND WEEK

நாள்                 :           11-04-2022 முதல்  13-04-2022         

மாதம்               :             ஏப்ரல்           

வாரம்               :           ஏப்ரல்  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :          திருப்புதல் – இயல் -1

1.       பாரதம் அன்றைய நாற்றங்கால்

2.      தமிழ்நாட்டில் காந்தி

3.       வேலுநாச்சியார்

4.      நால்வகைச் சொற்கள்

 


பொது நோக்கம்:-

o   கற்றல் விளைவுகள்

o   இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல்

o   வாழ்வில் எளிமையின் சிறப்பை உணர்தல்

o   சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்து கொள்ளுதல்

o   விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்

o   சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

o   மன வரைபடங்கள் மூலமும், விரைவுத் துலங்கள் குறியீடு காணொலி மூலமும் பாடங்களை வலுவூட்டல்

o   மாணவர்களிடம் ஒப்படைப்புகள் பெறுதல்

o   மாணவர்களின் கற்றல் அடைவுகளை சோதித்தல்

o   பாடங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளை மாணவர்கள் இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பு நோக்கல்

o   மனப் பாட பாடலை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

சில முக்கிய வினாக்கள்:

Ø  பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடலில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

Ø  இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்து கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

Ø  காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

Ø  காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

Ø  வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வை சுருக்கமாக எழுதுக.

Ø  சொல் என்றால் என்ன?

Ø  சொற்களின் வகைகள் யாவை?

Ø  பெயரையும்,வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?

Ø  பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடலை அடிபிறழாமல் எழுதுக..

Ø  தேசிய ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக

__________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post