10TH - TAMIL -UNIT 1 - STUDY MATERIAL

                              

                                                    பத்தாம் வகுப்பு - இயல் -1

குறிப்பு:-  காணொளிகள் இறுதியில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான இணைய வழித் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

        மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில்  இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 70 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.  

மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை  அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின்  இணைய வழி தேர்வு எழுதவும். மேலும் இயல் 1க்குட் தேவையான புத்தக வினாக்களுக்கான விடைகள் மற்றும் இயல் 1க்குத் தேவையான காணொளி பாடங்கள் என தொகுத்து உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களே இந்த 30 நாட்களை நன்முறையில் பயன்படுத்தி தமிழ்ப்பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று மேல்வகுப்பு செல்ல வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன். இதனை தொடர்ந்து  அடுத்து உள்ள இயல்கள் வரிசையாக பதிவேற்றம் செய்யப்படும்.

நன்றி,வணக்கம்

இயல் -1 

அமுத ஊற்று 

இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில் 

குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்

1. அன்னை மொழியே

2. தமிழ்ச்சொல் வளம்

3. எழுத்து,சொல்

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  அனைத்து  பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள்  இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள்  குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து  உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


10.ஆம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண்

வினாவங்கி

(திருத்தி அமைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது)

இயல் - 1
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக:-

1)எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-----------------                        

)எந்+தமிழ்+நா            )எந்த+தமிழ்+நா          )எம்+தமிழ்+நா         )எந்தம்+தமிழ்+நா

2) மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது--------------                        

வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும்   

பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்                

ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்      

வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்

3) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன                                                                            

)இலையும் சருகும்        )தோகையும் சண்டும்               )தாளும் ஓலையும்       

)சருகும் சண்டும்

4) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை.                          

குலைவகை               மணிவகை                           கொழுந்துவகை       

இலைவகை                                                          

5) கேட்டவர்மகிழப்பாடியபாடல்-இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும்,வினையாலணையும் பெயரும்முறையே                                                                                                                                         )பாடிய;கேட்டவர்         பாடல்;பாடிய            )கேட்டவர்;பாடிய           

பாடல்;கேட்டவர்                                             

6) தமிழ் அரசாண்ட கண்டம்….                                                                                                                     

 ஆசியா       குமரி          ஐரோப்பா     ஆப்பிரிக்கா                                                      

 7) தென்னன் என்று குறிப்பிடப்பட்ட மன்னன்                                                                                               

 பாண்டியன்  சேரன்  சோழன்  பல்லவன்                                                                             

 8)முன்னும் என்ற சொல்லின் பொருள்…..                                                                                                        

 முந்தும்  முன்னர்  முன்னரும்  பொங்கியெழும்                                             

9)சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……                                                          

பாரதியார்  ஜி.யு.போப்  .சச்சிதானந்தன்  பாவலரேறு                                                         

 10)பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்                                                                                  

துரை.செந்தில் ஆதுரை.வேலு  துரை.செல்வம்  

துரை.மாணிக்கம்                                                    

11) அன்னை மொழியேஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத்தொகுப்பு                                       

மொழிவாழ்த்து  தேன்மொழி  கனிச்சாறு 

தமிழ்ச்சிட்டு                                                             

 12) தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்                                                             

 திருக்குறள் மெய்ப்பொருளுரை           கனிச்சாறு    பாவியக்கொத்து       

மகபுகுவஞ்சி                            

13) நற்கணக்கே எனக்குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு                                                       

)பதினெண்மேற்கணக்கு            )பதினெண்கீழ்க்கணக்கு           )நற்றிணை 

)சங்க இலக்கியம்

14)பாவலரேறு பாப்பத்தே எனக் குறிப்பிடும் நூல்                                                                                            

)கனிச்சாறு )பத்துப்பாட்டு )எட்டுத்தொகை )பாப்பாபாட்டு                                                                             

15)தும்பி என்பதன்  பொருள்                                                                                                                                 

)வண்டு   )தம்பி     )ஈசல்      )கரையான்                                                                                          

16)உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள-இவ்வடியில் காணும் நயம்                                              

)மோனை )எதுகை  )முரண்  )இயைபு                                                                                         

17)திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எனும் நூலை இயற்றியவர்                                                                

)வீரமாமுனிவர்  )ஜி.யு.போப்  )கிருட்டிணப்பிள்ளை  )கால்டுவெல்                                             

18)நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி….                                                                         

)தாள் )தண்டு )கோல்  )தூறு                                                                                                                  

19)மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்………       

   )இளங்குமரனார்  )தேவநேயப்பாவாணர்  )தாமோதரனார்  )சுந்தரனார்                                

20)சிவியல் என்பது------------ஐக்குறிக்கும்                                                                                                                               

)சுருங்கிய காய்           )சுருங்கிய பழம்           )சூட்டினால் பழுத்த பிஞ்சு  )அழுகிய பழம்                                       

21)மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?                                                                  

)அரும்பு  )வீ  )மலர்  )செம்மல்                                                                                                        

22)திருவள்ளுவர் தவச்சாலைஅமைந்துள்ளஇடம்                                                                      

)அல்லூர்     )வள்ளூர்     )நல்லூர்     )நெல்லூர் 

23)கொழுந்தாடை என்பது கரும்பினது------ 

 )இடைப்பகுதி      )அடிப்பகுதி      )கணப்பகுதி      )நுனிப்பகுதி   

24)செம்மல் என்பது பூவின் ………….நிலையக் குறிக்கும்                                                                        

)தோற்ற  )மலர்ந்த  )வாடின  )கீழே விழுந்த 

 25)இமைகளை மூடியபடி தமிழை எழுதும் ஆற்றல் பெற்றவர்……..                                

)பாவாணர் )திரு.வி. )பேரறிஞர்அண்ணா )பெரியார்

26)திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர்  

)இரா.இளங்குமரனார்  )பாவாணர் இ)திரு.வி.  )குன்றக்குடி அடிகளார்

 27)தனித்தமிழ் இயக்கம் என்ற நூலை இயற்றியவர்……….  

 )திரு.வி.  )மறைமலையடிகள்  )இரா.இளங்குமரனார்  )குன்றக்குடியடிகளார்                

28)பலாப்பிஞ்சைக்  குறிக்கும்சொல்லைத்தேர்ந்தெடுக்க 

 )பிஞ்சு  )வடு  )மூசு  )கவ்வை                                                                                                                     

29)கச்சல் என்பது பின்வருவனவற்றுள் எது?  

)மாம்பிஞ்சு  )எள்பிஞ்சு  )இளம்பாக்கு   )வாழைப்பிஞ்சு                                                                 

30)இளம்பயிர் வகையைக் குறிக்கும் சொல் தொகுப்பைத் தேர்ந்தெடு                                                         

)கூலம்,பயறு,கடலை             )வடு,மூசு,குரும்பை

)தளிர்.முறி,குருத்து                 )நாற்று,கன்று.மடலி                        

31)பன்மொழிப்புலவர் எனப் போற்றப்படுபவர்……..  

 ).பொ.சிவஞானம்    )கா.அப்பாதுரையார்     இ)சந்தக்கவிமணி ஈ)பெருஞ்சித்திரனார்                                               

32)சம்பா நெல்லின் உள்வகைகள்…..    

 )90      )70       )80      )60      

33)உலகத் தமிழ்க்கழத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்……….                                                      

)தேவநேயப்பாவாணர்  )திரு.வி.  )சச்சிதானந்தன்     )கா.அப்பாதுரையார்                                                         

34)கார்டிலா எனும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு…….                                                                                    

)1254  )1654   )1554   )1754                                                     

35)மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் இந்தியமொழி                                                                                          

)சமற்கிருதம்   )தமிழ்   )இந்தி   )பஞ்சாபி                                                                  

 36)நாடும்,மொழியும் நமதிரு கண்கள் எனப்பாடியவர்………..                                                         

)பாரதியார்  )பாரதிதாசன்  )கவிமணி  )தமிழழகனார்                                                    

 37) குச்சியின்  பிரிவு………..எனப்படும்.                                                                                                            

)போத்து  )குச்சி   )இணுக்கு  )சினை.                                                                               

38)பொருத்துக:                                                                                                                                                                 1)தட்டை  -  அ)கரும்பின் அடி                                                      

2)கழி     -  )புளி,வேம்பு முதலியவற்றின் அடி                  

3)கழை   -  )கம்பு,சோளம் முதலியவற்றின் அடி                   

4)அடி    )மூங்கிலின் அடி                                                     

)1-,2-,3-,4-   

)1-,2-,3-,4-                         

)1-,2-,3-,4-   

)1-,2-,3,4-


39)சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்


)தேவநேயப் பாவாணர்  )இளங்குமரனார்  )திரு.வி.  )மறைமலையடிகள்


40)போர்த்துகீசு நாட்டின் தலைநகர்……


)லெபனான்  )லிசுபன்  )கெய்ரோ  )ஹராரே


41)தமிழ்ச்சொல்வளம் எனும் கட்டுரை இடம் பெற்ற நூல்………


)சொல்லாய்வுக்கட்டுரைகள்  )தேவநேயம்  )மொழிமரபு  )ஆய்வியல் நெறிமுறைகள்


42)கார்டிலா என்னும் நூல் எந்த வரிவடிவில் அச்சிடப்பட்டது?


)பிரெய்லி  )பிரான்சு  )ஜெர்மன்  )ரோமன்


43)முத்தையும்,அமிழ்தையும் தருவது……


)சங்கு  )சிப்பி  )கடல்   )முத்து


44)தமிழ்மொழியின் அணிகலன்களாகக் கருதப்படுபவை………


)ஐஞ்சிறுங்காப்பியங்கள் )ஐம்பெருங்காப்பியங்கள்

)நீதிநூல்கள்  )இலக்கியங்கள்


45)கடல்சங்கினை எதனால் தடுத்து நிறுத்திக் காக்கிறது?


)கப்பல்  )சங்கு  )தோணி  )அலை


46)மெத்தவணிகலன் என்னும் சொல்லைப் பிரித்தெழுதும் முறை


)மெத்த+அணிகலன்)மெத்த+வணிகலன் இ)மெத்த+வணி+கலன் ஈ)மெத்தவணி+கலன்


47)ஒரு சொல்லோ,தொடரோ இருபொருள்பட வருவது………அணியாகும்


)தன்மையணி )இரட்டுறமொழிதலணி  )நிரல்நிரையணி  )தீவக அணி


48)இரட்டுற மொழிதலணி………எனவும் அழைக்கப் படுகிறது.


)வேற்றுமையணி ஆ)இயல்பு நவிற்சியணி)சிலேடையணி   )தீவக அணி


49)சந்தக்கவிமணி எனப் போற்றப்படுபவர்…….


)தேசிகவினாயகம்  )வெ.இராமலிங்கம்   )சுரதா   )தமிழழகனார்


50)தமிழழகனாரின் இயற்பெயர்…………


)சண்முகசுந்தரம்   )சோமசுந்தரம்  )சர்வர் சுந்தரம்  )அழகுசுந்தரம்


51)சார்பெழுத்து வகைகள்…….


)30    )10   )12   )18


52)பேச்சுவழக்கில்  உணர்வுக்கும்,இனிய ஓசைக்கும்………பயன்படுகிறது.


)உயிர்மெய்   )ஆய்தம்  )அளபெடை  )குற்றியலுகரம்


53)அளபெடுத்தல் என்ற சொல்லின் பொருள்


)அளவெடுத்தல் ஆ)அளவிடுதல்  )குறைந்தொலித்தல்  )நீண்டொலித்தல்


54)உயிரளபெடை………வகைப்படும்.


)3   )4   )5   )6


55)கூற்று1:செய்யுளில் ஓசையை நிறைவு செய்ய குறிலெழுத்துகள் அளபெடுக்கும்.

  கூற்று2:அளபெடயைக் குறிக்க அவற்றின் பின்னால் குறிலெழுத்துகள் எழுதப் பெறும்.


)கூற்று 1சரி,2தவறு    )கூற்றுதவறு,2 சரி     இ)இரண்டும் சரி       )இரண்டும் தவறு


56)உறாஅர்க்கு உறுநோய்  என்பது……அளபெடை


)சொல்லிசையளபெடை ஆ)இன்னிசையளபெடை              )இசைநிறையளபெடை  )ஒற்றளபெடை


57)செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது……..


)செய்யுளிசையளபெடை ஆ)இசைநிறையளபெடை            )இன்னிசையளபெடை ஈ)சொல்லிசையளபடை


58)கெடுப்பதூஉம்,படாஅ பறை என்பவற்றில் வரும் அளபெடைகள் முறையே


)செய்யுளிசை,இன்னிசை    )இன்னிசை,செய்யுளிசை

)சொல்லிசை,இசைநிறைஈ)இன்னிசை,குரலிசை


59)பெயர்ச்சொல் எச்சமாகத் திரிந்து அளபெடுத்த சொல்லைக் கண்டறிக.


)எஃஃகிலங்கிய  )ஓஒதல்  )எடுப்பதூஉம்  )உரனசைஇ


60)ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகள்


)10     )18    )6    )12


61)மொழி…….வகைப்படும்.


)4      )5     )3       )6


62)தனிமொழியாக அமைந்த இணையைத் தேர்ந்தெடுக்க.


)நான் யார்?,சொல்       )நான்,சொல்    )பல,பலகை     )எட்டு,தாமரை


63)எழிலன் படித்தான் என்பது…….மொழி


)தொடர்மொழி             )தனிமொழி    )பொதுமொழி              )மூவகைமொழி


64)எட்டு என்ற தனிமொழியே எள்+து எனப்பிரிந்து பொருள் தருவது……


)மூவகைமொழி           )தனிமொழி    )தொடர்மொழி             )பொதுமொழி


65)ஈதல் என்ற தொழிற்பெயரின் வினையடி


)ஈகை             )     )தல்                )ஈக


66)விகுதிபெற்ற தொழிற்பெயரைக் கண்டறிக.


)தட்டு   )கேடு   )நடை   )சூடு


67)விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது……..


)முதனிலைத்தொழிற்பெயர்        )முதனிலைத்திரிந்ததொழிற்பெயர்         )பகுதி               )வினையாலணையும்பெயர்.   


68)நடவாமை என்பது………தொழிற்பெயர்


)வினையாலணையும்பெயர்       )எதிர்மறை     )முதனிலை      )முதனிலை திரிந்த


69)மூவிடங்களிலும்,முக்காலத்திலும் வரும் பெயர்…….


)சினைப்பெயர்             )தொழிற்பெயர்            )காலப்பெயர்                )வினையாலணையும்பெயர்


70)வினையே,பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது……..

)தொழிற்பெயர்            )வினையாலணையும்பெயர்                   )சினைப்பெயர்              )காலப்பெயர் 


புத்தக வினாக்கள்

                                    இயல் – 1                        

                                       அமுத ஊற்று

பத்தாம் வகுப்புதமிழ்

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                 

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும் ) தோகையும் சண்டும்    ) தாளும் ஓலையும் ) சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

) எந் + தமிழ் + நா ) எந்த + தமிழ் + நா ) எம் + தமிழ் + நா    ) எந்தம் + தமிழ் + நா

3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________

) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய

) பாடல்;கேட்டவர்

4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

) குலைவகை ) மணிவகை) கொழுந்துவகை ஈ) இலை வகை

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                   

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

v  வேங்கைமரம்தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

v  சீவக சிந்தாமணி    

v  குண்டலகேசி

v  வளையாபதி

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

v    ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

v    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.- தவறு

v    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

காரணம்:

v  தாறு என்பது வாழைக்குலை

v  சீப்பு என்பது வரிசையான பழங்கள்

4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

v  உடுப்பத்தூஉம் உண்பதூஉம்இன்னிசை அளபெடை.

v  செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத்

 தொடரில் அமைக்க.

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

 3.‘அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாததுஇவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

 அறிதல்

அறியாமை

புரிதல்

புரியாமை

தெரிதல்

தெரியாமை

பிறத்தல்

பிறவாமை

செய்யுள் மற்றும் உரைநடை

நெடுவினாக்கள்

இயல் – 1

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்

  வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக..

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

மொழியை ஆள்வோம்

) :- மொழி பெயர்ப்பு:-

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart Nelson Mendela

விடை : ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

விடை: மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

 

) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை,மந்தை,கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

கற்குவியல்

புல்

புற்கட்டு

பழம்

பழக்குலை

ஆடு

ஆட்டுமந்தை

 

) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

விடை: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை: ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

விடை: நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

விடை: பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

) தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

விடை: பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

விடை: வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைக் தந்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

விடை: நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சிக் கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

விடை: பூங்காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

விடை: ஆவைப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிற்றைப் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

தேன்மழை

பூ விலங்கு

பொன்செய்

பொன்விலங்கு

மணிவிளக்கு

பூமழை

மணிமேகலை

வான்மழை

) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-

   குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

குறளின்பம்

குறளின்பத்தை அறியாதவர் உண்டோ?

சுவைக்காத இளநீர்

உழவன் சுவைக்காத இளநீர் உண்டா?

காப்பியச் சுவை

சிலப்பதிகார காப்பியச் சுவைக்கு ஈடு  உண்டா?

மனிதகுல மேன்மை

விருந்தோம்பல் மனித குல மேன்மையை உயர்த்தக் கூடிய பண்பு அல்லவா?

விடுமுறைநாள்

சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா?

) எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,இரண்டு

’ ,

DOWNLOAD PDF

CLICK HERE

இயல் -1 

காணொளிகள்

அன்னை மொழியே


தமிழ்ச்சொல்வளம்


எழுத்து,சொல்





  

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post