10TH - 3RD REVISION - MODEL QUESTION - ANSWER KEY

 அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவர்களுக்கும் கல்விவிதையின் வணக்கம். தமிழ்விதை வலைதளம் வெளியிட்ட பத்தாம் வகுப்பு மூன்றாம் திருப்புதல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் நமது கல்வி விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி,வணக்கம்

 

மூன்றாம் திருப்புதல் மாதிரி வினாத்தாள் 2021-2022

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக்

கொள்ளவும்.அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)             அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                            15×1=15

1.திருநெல்வேலி ஊர்பெயரின் மரூஉ_________________

அ) நெய்வேலி             ஆ) நெல்லை              இ) வேலூர்                ஈ) திருநெல்லை

2. போதி தர்மர் உருவாக்கிய தத்துவம் ______________

அ) சமணம்                ஆ) கிரேக்கம்                        இ) புத்தம்        ஈ) ஜென்

3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்   ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்   ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

4. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்        ஆ) யோசேப்பு            இ) அருளப்பன்           ஈ) சாந்தா சாகிப்

5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்           ஆ) கூவிளம் புளிமா நாள்                  இ) தேமா புளிமா காசு    

ஈ) புளிமா தேமா பிறப்பு

6. மேன்மை தரும் அறம் என்பது ___________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது            ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது            ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

7. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா   ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா   ஈ) கலிப்பா

8. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

9. கண்ணன் கோபத்தை தள்ளி வைத்து பிரச்சனையினை தீர்க்க வேண்டும்- இத்தொடருக்கான மரபுத் தொடர் எது?

அ) மனக்கோட்டை       ஆ) அள்ளி இறைத்தல்            இ) கண்ணும் கருத்தும்          ஈ) ஆறப்போடுதல்

10. இஸ்மத் – சன்னியாசி என்பதன் பொருள் ___________

அ) முற்றும் துறந்தவர்   ஆ) தூய துறவி           இ) ஆசை அதிகம் கொண்டவர்           ஈ) கற்றவர்

11. இயல்பாய் நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறும் அணி ________

அ) தீவக அணி           ஆ) நிரல் நிறை அணி            இ) தற்குறிப்பேற்ற அணி    ஈ) தன்மை அணி

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

     வாய்மணி யாகக் கூறும் வாய்மையே மழைநீ ராகித்

      தாய்மணி யாக மார்பில் தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

      தூய்மணி யாகத் தூவும் துளியிலது இளங்கூழ் வாடிக்

      காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ.

12)இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?

அ. இயேசு காவியம் ஆ. கம்பராமாயணம் இ. தேம்பாவணி ஈ. நீதி வெண்பா

13) இப்பாடலை இயற்றியவர் யார்?

அ. குலசேகர ஆழ்வார் ஆ. இளங்கோவடிகள் இ. வீரமாமுனிவர்  ஈ. கம்பர்

14) காய்மணி- என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.பண்புத்தொகை  ஆ.வினைத்தொகை இ.இரண்டாம் வேற்றுமைத்தொகை ஈ)உவமைத்தொகை

15) தயங்கி  என்ற சொல்லின் பொருள்

அ. மெதுவாக  ஆ.வருந்தி    இ.களைத்து  ஈ.அசைந்து

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                      4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. ‘ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் ‘ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

          தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

          அ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலும் என

              ஜெயகாந்தன் கருதினார்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலும் என கருதியது யார்?

          ஆ. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக

    கருதப்படுகிறது.

                    இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக

           கருதப்படுகிறது?

18. மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள்

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.

          கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்.

          சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

20. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

·        பாசவர்வெற்றிலை விற்போர்

·        வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·        பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·        உமணர்உப்பு விற்பவர்

21. ‘ மாற்றம் ‘ – எனத் தொடங்கி ‘ சாலை ‘ என முடியும் காலக்கணித பாடலை எழுதுக.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்1

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

 

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                         5×2=10

22. மரபுத் தொடருக்கான பொருளறிந்து  தொடரில் அமைத்து எழுதுக:-

அ. மனக்கோட்டை

தேர்தலில் கண்ணன் போட்டியிட்டு நாளையே முதலமைச்சராகி விடலாம் என மனக்கோட்டை கட்டுகிறான்.     

ஆ. ஆறப்போடுதல்.

          கண்ணன் எந்த ஒரு பிரச்சனையையும் கோபத்தை ஆறபோட்டப்பின் தீர்வு காண வேண்டும்.

23. பொருத்தமான நிறுத்தற்க் குறியிடுக:-

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

சேரர்களின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன் ‘ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான் ‘ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன,

24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

Ø  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.

Ø  .கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

          மெய்ப்பொருள் காண்ப தறிவு

25. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- அறியேன்

          அறியேன் – அறி + ய் + ஆ + ஏன்

          அறி – பகுதி

          ய்    - சந்தி

          ஆ – எதிர் மறை இடைநிலை புணர்ந்து கெட்டது

          ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

26. பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

          “ தம்பீ? எங்க நிக்கிறே?”

          “ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது”.

          “ அங்ஙனக்குள்ளே டீ சாப்ட்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு..நா வெரசா வந்துருவேன்”.

 

          “ தம்பி ? எங்கே நிற்கிறாய்?”

          “ நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணா! எதிர்ப்புறம் தேநீர் கடை இருக்கிறது “.

          “ அங்கேயே தேநீஎ அருந்திக்கொண்டு, செய்தித்தாளினை வாசித்துக் கொண்டு இரு. நான்

          விரைவாக வந்துவிடுவேன்”.

27. கலைச்சொல் தருக:-

          அ. Patent - காப்புரிமை                               ஆ) Renaissance – மறுமலர்ச்சி

28. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதனை நிலைநாட்ட, போரிடும் திணைக் குறித்து எழுதுக

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவை ச்சூடிப் போர்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                        2×3=6

29. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக

     மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர்   

     வாயிலாக விளக்குக.

Ø  பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.

Ø  பார்வையற்றவர்  போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல்.

Ø  தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்.

 

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

தமிழர்,போரிலும் அறநெறிகளை பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர்,புற முதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

          அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

போர் அறம் என்பது வீரமற்றோர்,புற முதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

          ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

          இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள்

       குறிப்பிடுகின்றன?

போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.

31.” தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

          இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                      2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

      பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

     கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

     தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

          ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

                    சிலப்பதிகாரம்

          ) பட்டினும் மயிரினும் என்பதன் இலக்கண குறிப்பு தருக.

                    எண்ணும்மை

இ) காருகர்பொருள் தருக.

          நெய்பவர்

33. “ கவிஞன் யானோர் காலக் கணிதம்” – எனத் தொடங்கும் கவிஞர்  கண்ணதாசனின் கவிதையில் உங்களை கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.

          மாணவர்கள் காலக்கணிதம் பாடல் வரிகளில் ஏதேனும் மூன்று வரிகள் எழுதி அதற்கான காரணமும் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் மதிப்பெண் வழங்கவும்.

34. “ நவமணி வடக்க “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே

-    வீரமாமுனிவர்

(அல்லது )

          “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

-    இளங்கோவடிகள்

 

 

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                 2×3=6

35. தீவக அணியை விளக்கி,மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.

          செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோ டு சென்று பொருந்திப் பொருளை விளக்குவ தா ல் இவ்வணி தீவக அணி எனப்பட்டது. இது முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

36. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

      டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

வன் -கண்

நேர் - நேர்

தேமா

2

குடி – காத் -தல்

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

3

கற் – றறி- தல்

நேர் – நிரை - நேர்

கூவிளங்காய்

4

ஆள் -வினை-யோ

நேர் – நிரை - நேர்

கூவிளங்காய்

5

டைந்-துடன்

நேர் - நிரை

கூவிளம்

6

மாண்-ட

நேர் - நேர்

தேமா

7

தமைச்சு

நிரைபு

பிறப்பு

 

37. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்;  

      அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

v  அவந்தி நாட்டு மன்னன் மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்கிறான்வஞ்சித்திணை

v  அவந்தி நாட்டு மன்னனை மருத நாட்டு மன்னன் காஞ்சிப் பூவை எதிர்த்து போரிடுகிறான் - காஞ்சித்திணை

 

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                            5×5=25

38. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதீகளை இக்கால வணிக வளாகங்களோடும்   

      அங்காடிகளோடும் ஒப்பிட்டு  எழுதுக.

         

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

 

( அல்லது )

      ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக

     மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

Ø  பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது.

Ø  கருணையனை தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழித் தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

 

39. அ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப்  

         பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

          சேலம்

03-03-2021

அன்புள்ள மாமாவுக்கு,

          நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில் நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                              நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

          பெறுதல்

                    திரு.இரா.இளங்கோ,

                    100,பாரதி தெரு,

                    நாமக்கல்.

 

( அல்லது )

    ஆ) உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து

        செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம்   

        எழுதுக.

அனுப்புநர்

                    அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

 

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

          வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இடம் : சேலம்                                               இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                                  தங்கள் உண்மையுள்ள,                                                             அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636006

 

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.



ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி  

கொடுப்பவன் என் கொடையைப் பற்றி எழுது என்றான்

பெறுபவன் என் வறுமையைப் பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் கொடையை தடுக்காதே என்று

 

41. சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  மதியழகன் மகள் தமிழினியாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேரவிருக்கிறார். அவரின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மதிப்பெண் பட்டியல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர் தம்மை தமிழினியாளாக நினைத்து உரியப் படிவத்தை நிரப்புக..

பெயர்

தமிழினியாள்

தேர்வெண்

15016032

தமிழ்

92

ஆங்கிலம்

89

கணிதம்

100

அறிவியல்

75

சமூக அறிவியல்

88

 

42. அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும்,அதனால் ஏற்படும் நன்மைகளும்

பட்டியலிடுக.

நாம் பின்பற்ற வேண்டிய அறங்கள்

அதனால் ஏற்படும் நன்மைகள்

குறளை பேசாதிருத்தல்

தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

மன அமைதிப் பெறலாம்.

உண்மை பேசுதல்

நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

உதவி செய்தல்

மன மகிழ்ச்சி கிடைக்கும்

அன்பாய் இருத்தல்

அனைவரும் நண்பராகிவிடுவர்

 

( அல்லது )

    ஆ) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘ மரம் நடு விழாவுக்கு ‘ வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்

பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ சார்பாக நன்றியுரை எழுதுக.

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                     3×8=24

43. அ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின்  முன்னேற்றத்தில் மாணவர் பங்கு.

          குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்  மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில்

          மேடை உரை எழுதுக.

         

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

          மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

          சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

          வெள்ளையனே வெளியேறு,உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

          மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்,இளஞ்செஞ்சிலுவை சங்கம்,NSS,NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

          நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

 

( அல்லது )

    ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறக்கருத்துகளைத் தொகுத்து, அவை இன்றும் தேவையே

           என்பதனை நிறுவுக.

 குறிப்புச் சட்டகம் இட்டு, உட்தலைப்புகள் இட்டு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ) ‘ ஒருவன் இருக்கிறான் ‘ என்ற கதைப் பகுதியைச் சுருக்கமாக எழுதுக.

          ஒருவன் இருக்கிறான்

-கு.அழகிரிசாமி

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

          கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

          எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

( அல்லது )

     ஆ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

          மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல-உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு

          காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது

          உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், உப்பின்

          சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் – மகிழ்ச்சி.

நாடகப் பாங்கில் குறிப்புகளைக் கொண்டு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

         

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

          குறிப்புகள் : உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் - சுழன்றும் ஏர் பின்னது உலகம்.

 

குறிப்புச் சட்டம்

உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம்

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்

சுழன்றும் ஏர்பின்னது உலகம்

முடிவுரை

 மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

( அல்லது )

     ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

          குறிப்புகள் : தமிழகம் தந்த தவப் புதல்வர் – நாட்டுப் பற்று – மொழிப் பற்று – பொது வாழ்வில் தூய்மை

-     எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை

 

குறிப்புச் சட்டம்

தமிழகம் தந்த தவப் புதல்வர்

நாட்டுப் பற்று

மொழிப்பற்று

பொது வாழ்வில் தூய்மை

எளிமை

மக்கள் பணியே மகத்தான பணி

முடிவுரை

 மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

விடைக்க்குறிப்புகளின் - PDF  விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் 

 

 

வினாத்தாள் வடிவமைப்பு.

WWW.TAMILVITHAI.COM

WWW.KALVIVITHAIGAL.COM

மூன்றாம் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய

CLICK HERE 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post